"லீக்" ஆகிடுச்சே ஆடியோ.. இப்படி ஆபாசமாக பேசியது இம்ரான்கானா.. அந்த 2 பெண்கள் யார்.. கிளம்பிய சர்ச்சை
2 பெண்களிடம் இம்ரான்கான் ஆபாசமாக பேசியதாக புகார்கள் எழுந்து வருகின்றன
லாகூர்: 2 பெண்களிடம் இம்ரான்கான் ஆபாசமாக பேசியதாக ஆடியோக்கள் வெளியாகி, பாகிஸ்தானை மேலும் உஷ்ணமாக்கி வருகிறது.. என்ன நடந்தது?
ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, இந்தியாவை புகழ்வதை விடாமல் செய்து கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் நாட்டின் இம்ரான்கான்.
கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்தது.. என்னென்னவோ திட்டங்களை, அறிவிப்புகளை இம்ரான் கான் மேற்கொண்டும், நிலைமையை சீரமைக்க முடியவில்லை..
இந்தியாவுடனான உறவு ரொம்பவே முக்கியம்! மீண்டும் புகழ்ந்த இம்ரான்.. ஆனால் பாஜக பற்றி பரபர பேச்சு
இம்ரான்கான்
சரியாக அரசாங்கத்தை வழிநடத்தவில்லை என்பதால், இம்ரான்கான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியும் பெற்றது.. இம்ரான் கான் அரசும் கவிழ்ந்தது.. பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.. கடந்த ஆண்டு அக்டோபரில், இம்ரான் கான் சட்டம் இயற்றுபவர்களின் நம்பிக்கையை விலைக்கு வாங்க முயன்றதாக ஒரு ஆடியோ வெளியாகி இருந்தது.
காய்நகர்த்தல்
அதனால், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது, அவர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு இது தொடர்பாக தன்னுடைய விளக்கத்தையும் அளித்திருந்தார்.. இம்ரான்கான் வெளியேற்றப்பட்டாலும்கூட, அவருக்கு எதிராக காய்நகர்த்தல்கள் வெளியாகி கொண்டேதான் இருக்கிறது.. இப்போதுகூட ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது.. மொத்தம் 2 ஆடியோக்கள் வெளியாகி உள்ளன.. இந்த ஆடியோ கிளிப்பிங்ஸை, அந்நாட்டின் பத்திரிகையாளர் சையத் அலி ஹைதர் தன்னுடைய யூடியூப் சேனலில் ஷேர் செய்துள்ளார்.
க்ளப்பிங்ஸ்
இந்த ஆடியோவில் இம்ரான்கான், ஒரு பெண்ணிடம் ஆபாசமாக, உடலுறவு குறித்து பேசுவதாக உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த ஆடியோ பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்ததாகவும் சில பாகிஸ்தான் செய்தி வெப்சைட்களில் செய்திகள் வந்துள்ளன.. ஆனால், இது உண்மையிலேயே இம்ரான்கான் குரல்தானா? ஆடியோவின் நம்பகத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்று தெரியவில்லை.. சில பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் ஆடியோவில் உள்ள குரல் உண்மையில் இம்ரான் கானுடையது என்று அடித்து சொல்கிறார்கள்..
கான் கான்
இப்போதைய கூட்டணி அரசாங்கமும், ராணுவ அமைப்பும் சேர்ந்து, இம்ரான் கானுக்கு எதிராக இப்படியெல்லாம் பொய் குற்றங்களை சுமத்துவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.. "கான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் அவர் தன்னை ஒரு முன்மாதிரி முஸ்லீம் தலைவராக காட்டுவதை நிறுத்துவார் என்று நான் நம்புகிறேன்" என்று பத்திரிகையாளர் ஹம்சா அசார் சலாம் தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்..
லீக்ஆடியோ
கடந்த சில மாதங்களாகவே, கைநழுவி போன பிரதமர் பதவியை, எப்படியாவது மீட்டு, பாகிஸ்தானை காப்பாற்றுவேன் என்று பிரச்சாரத்தில் விடாமல் சொல்லி வருகிறார் இம்ரான்கான்.. இப்படிப்பட்ட சூழலில், 2 பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக செய்திகள் வெளியாகி வருவதும், அதை அவரது ஆதரவாளர்கள் மறுப்பதும், ஆனால், கட்சியின் தலைமை வரை இந்த விஷயம் சென்றுள்ளதும், பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.