ஒருவழியாக மீள்கிறது சீனா.. முடிவுக்கு வருகிறது தொற்று பாதிப்பு.. ஆனாலும் அந்த 7 பேர்.. என்னாச்சு?
சீனா இப்படி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க, சில நாடுகள் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியது.
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்த 7 நபர்களுக்கு XBB.1.5 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் திடீரென பரவ தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 67 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 67 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மட்டுமல்லாது ஏராளமான பொருளாதார பாதிப்புகளையும் இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டது.
இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்தே இன்னும் சில நாடுகள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றன. இதற்கு காரணம் அந்நாடுகள் பின்பற்றிய கடுமையான கட்டுப்பாடுகள்தான். சில நாடுகள் இப்படி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க, சில நாடுகள் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியது. இந்த நாடுகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

அமெரிக்கா
உதாரணமாக அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தொற்றுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறின. இந்நாடுகளில் தொற்று பாதிப்பு, உயிரிழப்பு போன்றவை அதிக அளவில் பதிவாகியிருக்கின்றன. சீனாவை பொறுத்த அளவில் 'ஜீரோ' கோவிட் கொள்கை பின்பற்றப்பட்டது. அதாவது யாருக்கேனும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் வசிக்கும் பகுதி சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். முதலில் தொற்று பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர் குடும்பம் தொடங்கி அந்த ஏரியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரிசோதனை செய்யப்படும்.

கடும் கட்டுப்பாடுகள்
இதில் யாருக்கேனும் தொற்று பாதிப்பு அறிகுறி இருந்தால் கூட அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவ்வளவு கெடுபிடி காரணமாக உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் இருந்தாலும் வைரஸ் பாதிப்பு வரிசையில் பின்தங்கி இருந்தது. ஆனாலும் இந்த கட்டுப்பாடுகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சாமானிய மக்களின் வருமானம் இந்த அதீத கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே மக்கள் போராட்டங்களில் குதித்தனர். பொதுமக்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

புதிய வைரஸ்
இதனையடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு 'ஜீரோ கோவிட் கொள்கை' கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில், அப்போதுதான் உண்மையான ஆபத்தே கண்ணுக்கு தெரிந்தது. அதாவது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஒமிக்ரான் கொரோனா வைரஸின் மரபணு மாறிய XBB.1.5 வரைஸ் சீனா முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. மெடிக்கல் ஷாப்களில் இருந்த மொத்த மருந்துகளும் காலியாகின. மருத்துவமனைகளிலும் கிளினிக்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

உயிரிழப்பு
எதிர்பார்த்தைப்போலவே உயிரிழப்பும் அதிகரித்தது. இருப்பினும் அந்நாட்டு அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததால் உயிரிழப்பு வெகுவாக குறைந்து தற்போது தொற்று பாதிப்பும் ஏற முடிவுக்கு வந்துள்ளது. அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சுகாதாரம் மற்றும் இதர துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். ஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்த 7 பேருக்கு XBB.1.5 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சீனாவில் இன்னும் கொரோனா தொற்று பாதிப்பு முடிவுக்கு வரவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications