லைபீரியாவில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க டாக்டருக்கும் நோய் தாக்கியது!
வடக்கு கரோலினா: லைபீரியாவில், அதி பயங்கரமான எபோலா தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு அந்த வைரஸ் தாக்கியுள்ளது.
இதுகுறித்து வடக்கு கரோலினாவைச் சேர்ந்த சமரிதான்ஸ் பர்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், லைபீரியாவின் மோன்ரோவியா நகரில் உள்ள மருத்துவமனையில் எபோலா தாக்கிய நோயாளிகளுக்கு டாக்டர் கென்ட் பிரான்ட்லி சிகிச்சை அளித்து வந்தார்.

தற்போது அவருக்கும் எபோலா தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. டாக்டர் பிரான்ட்லி, எங்களது அமைப்பின் மருத்துவ இயக்குநராக இருந்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பயங்கரமான வைரஸாக இந்த எபோலா வைரஸ் கூறப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் தற்போது உள்ள அதி பயங்கரமான அபயாகரமான வைரஸ்களில் இதுவும் ஒன்றாகும். பல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த எபோலா தாக்கி பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் என்ன கொடுமை என்றால் எபோலா தாக்கிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கும் இது அதிக அளவில் பரவி வருவதுதான்.
33 வயதான பிரான்ட்லி, 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் லைபீரியாவில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுவரை ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தாக்கி 672 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications