துபாய், ஷார்ஜா, அஜ்மானில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி
துபாய்: அமீரகத்தில் துபாய், ஷார்ஜா உள்ளிட்ட இடங்களில் இன்று காலை கனமழை பெய்துள்ளது.
அமீரகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை துபாய், ஷார்ஜா, ராஸல் கைமா, ஜபல் அலி, அஜ்மான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
காலையில் மழை பெய்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மக்கள் மழை பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
மழை
ஷார்ஜா மற்றும் துபாயில் கனமழை என்று கூறி சாலையில் வாகனங்கள் செல்கையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரயீஸ் உல் ஹக்.
|
முதல் மழை
2016ம் ஆண்டின் முதல் மழை!! யய்!!! #rain #Dubai #MyDubai என ஆர்த்தி ஸ்ரீராம் தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
|
துபாய்
துபாயில் மழை பெய்தால் கொட்டித் தீர்த்துவிடும். #MyDubai என ரபாத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
|
பாலைவனமா?
இப்படி மழை கொட்டுகிற துபாயை பார்த்து வறண்ட பாலவனம் என்பதா என அஷ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications