ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி உச்சகட்ட போராட்டம்- போலீசுடனான மோதலில் 300 பேர் காயம்
ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் ஜனநாயகம் போரி நடைபெற்று வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான மோதலில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உலகின் நிதி மையம் என்ற சிறப்பு பெயரைப் பெற்றுள்ள ஹாங்காங் பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. கடந்த 1997-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ந் தேதி, சீனாவின்வசம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டது.

அது முதல், ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ‘ஒரு நாடு இரு ஆட்சி முறை' என்ற அடிப்படையில் ஹாங்காங் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், சீனா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்தான் அந்த நகரை வைத்துள்ளது.
தற்போது ஹாங்காங்கின் ஆட்சியாளராக தலைமை நிர்வாகி என்ற பெயரில் லீயுங் சன் யிங் செயல்பட்டு வருகிறார். ஹாங்காங்கில், அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு 2017-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என சீனா அறிவித்துள்ளது.
ஆனாலும் ஹாங்காங் மக்கள் தங்கள் விருப்பப்படி அந்தத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது. சீன அரசு அமைக்கிற குழுதான் வேட்பாளர்களை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் தலைவரை தாங்களே ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்திரமான வாக்குரிமை வேண்டும் என கேட்டு மாணவர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டகாரர்களை ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் எடுத்து வருகின்றனர் இருந்தாலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.
இன்று காலை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications