கைது செய்ய வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை 'அதை' வைத்து தாக்கிய பெண்ணுக்கு 3 மாத சிறை
விக்டோரியா சிட்டி: போலீஸ் இன்ஸ்பெக்டரை மார்பகங்களால் தாக்கிய 30 வயது பெண்ணுக்கு மூன்றரை மாத சிறை தண்டனை விதித்துள்ளது ஹாங்காங் நீதிமன்றம்.
ஹாங்காங்கில் இருந்து சீனாவின் மெயின்லேண்ட் பகுதிக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால், ஹாங்காங்கில் அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டுகிறது. இதை எதிர்த்து மூன்று வருடங்களாக தொடர் போராட்டங்கள் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற போராட்டத்தில், லை-யிங் (30) என்ற பெண்மணியும் பங்கேற்றார். அப்போது, போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை மார்பகங்களால் தாக்கியுள்ளார் லை-யிங். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துயேன் முன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
லை-யிங்கிற்கு 3 மாதங்கள் மற்றும் 15 நாள் சிறை தண்டனை கொடுத்துள்ளது கோர்ட், போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 14 வயதான மாணவரை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப கோர்ட் உத்தரவிட்டுள்ளது.