16 மணி நேரம் திக் திக்! கையில் துப்பாக்கி.. காருடன் ஏர்போர்ட்டுக்குள் புகுந்த நபர்..அதிர்ந்த ஜெர்மனி
பெர்லின்: ஜெர்மனியில் விமான நிலையத்திற்குள் காருடன் புகுந்து 16 மணி நேரம் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபரின் 4-வயது மகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் தனது 4-வயது மகளை பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு 16 மணி நேரம் ஹம்பர்க் விமான நிலையத்தில் போக்கு காட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- ஜெர்மனி நாட்டின் ஹாம்பர்க் நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை நோக்கி அசுர வேகத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

துப்பாக்கியால் சுட்டார்: பாதுகாப்பு அதிகாரிகள் அல்ர்ட் ஆவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் விமான நிலையத்தின் பாதுகாப்பு நுழைவு வாயிலை காரால் இடித்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். இதனால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காருக்குள் இருந்தபடி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் தனது 4-வயது மகளுடன் காரை நேராக விமானத்திற்கு கீழே பார்க் செய்தார்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் உடனடியாக விமான நிலையத்தை சுற்றி வளைத்தனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு கருதி அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகளும் கடும் அவதி அடைந்தனர். விமான நிலையத்தில் பெரும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது மகளை அழைத்து கொண்டு விமான நிலையத்தில் புகுந்துள்ளதாக போலீசார் முதல் கட்ட விசாரணைக்கு பிறகு தெரிவித்தனர்.
16 மணி நேரம் பேச்சுவார்த்தை: விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதோடு, பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு இருப்பதால் பயணிகளிடையே பெரும் அச்சம் நிலவியது. தொடர்ந்து விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபருடன் பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. உளவியல் நிபுணர்களும் அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கிட்டதட்ட 16 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு தனது மகளை விட்டு விட்டு அந்த நபர் வெளியேறினார். இதையடுத்து 4-வயது சிறுமியை பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பீதியை ஏற்படுத்திய நபரை கைது செய்தனர். இதனால், ஜெர்மனியில் 16 மணி நேரம் நீடித்த பெரும் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications