பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவால் புற்றுநோய் வரலாம்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி போன்ற சில அசைவ உணவுகளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுதாகார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக குடல் புற்றுநோய் பல மடங்கு அதிகரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் முறையற்ற உணவுப் பழக்கவழக்கமே ஆகும்.

அதன் தொடர்ச்சியாக குடல் புற்றுநோய் குறித்து 10 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகள் தங்களது ஆராய்சி முடிவை உலக சுகாதார அமைப்பிடம் தாக்கல் செய்தனர்.

குடல் புற்றுநோய்...

குடல் புற்றுநோய்...

அதில், குடல் புற்றுநோய்க்கு கடைகளில் விற்பனையாகும் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, சாஸ்ஜேஜ் போன்றவற்றை உண்பதே முக்கிய காரணம் என சுட்டிக் காட்டப்பட்டது. இதனால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட், மது ஆகியவற்றின் பட்டியலில் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியும் சேர்ந்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி...

பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி...

பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி உள்ளிட்ட பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் மாமிசங்கள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது மட்டுமல்ல, புற்றுநோய் வரும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவப்பு நிற இறைச்சி...

சிவப்பு நிற இறைச்சி...

மேலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிவப்பு நிற இறைச்சிகளில் புற்றுநோய் உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

விமர்சனம்...

விமர்சனம்...

ஆனால், இந்த ஆய்வின் முடிவை இறைச்சி தொழில் நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. வெறும் கோட்பாடு அளவிலான ஆபத்துகளையும் இந்த ஆய்வு கணக்கில் சேர்த்துள்ளதாக அவை வாதிடுகின்றன.

அறிவுரை...

அறிவுரை...

அதேசமயம், இறைச்சிகளால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களையும் மறுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், ‘இதற்காக உடனடியாக அனைவரும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் எனக் கூறவில்லை. அதற்குப் பதில் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் அத்தகைய உணவுகளின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்' என அறிவுரை கூறுகின்றனர்.

உயிரிழப்போர் எண்ணிக்கை...

உயிரிழப்போர் எண்ணிக்கை...

பர்கர், பன்றி இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் நோய்க்கு பிரிட்டனில் ஆண்டு ஒன்றிற்கு 1,50,000 பேர் பலியாகி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+