மார்டன் "விநாயகர்..!" தனியாக வந்த மண்டையோடு! ஆப்ரேஷன் செய்து சிறுவனை காப்பாற்றிய டாக்டர்கள்! செம
இஸ்ரேல்: இஸ்ரேல் நாட்டில் விபத்தில் சிக்கிய சிறுவனின் மண்டையோடு முதுகெலும்பில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில், அதை வெற்றிகரமாக மருத்துவர்கள் மீண்டும் பொருத்தியுள்ளனர்.
இந்த நவீன உலகில் மருத்துவம் வேற லெவலில் பாய்ந்து வருகிறது. சில காலத்திற்கு முன்பு வரை குணப்படுத்தவே முடியாத நோய்கள் என்று நாம் நினைத்த நோய்களுக்குக் கூட இப்போது மருந்துகள் உள்ளன.
இதனால் மனிதர்களின் சராசரி வாழ்நாள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும், குழந்தை பிறக்கும் போது ஏற்படும் மரணங்கள், சிறு வயது மரணங்களும் கூட வெகுவாக குறைந்தே உள்ளது.

என்ன நடந்தது: இப்படி மருத்துவத் துறை அசாதாரண வேகத்தில் முன்னேறி வரும் நிலையில், பல அரிதான சம்பவங்களும் நடந்தே வருகிறது. அப்படியொரு "அதிசயம்" தான் இப்போது இஸ்ரேலில் நடந்துள்ளது. சாத்தியமே இல்லாத ஒன்றை அந்நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் சாத்தியப்படுத்தியுள்ளனர். அங்குள்ள 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை அந்நாட்டின் மருத்துவர்கள் செய்துள்ளனர்.
12 வயது சுலைமான் ஹாசன் என்ற சிறுவன் அங்கே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த சிறுவனுக்கு "internal decapitation" எனப்படும் உள் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கார் மோதிய வேகத்தில் அவரது மண்டை ஓடு முதுகெலும்பிலிருந்து பிரிந்துள்ளது. இதனை bilateral atlanto occipital joint dislocation என்று குறிப்பிடுவார்கள்.
ஆப்ரேஷன்: வெளிப்புறம் பார்க்க நார்மலாக இருந்தாலும் உள்ளே அவரது முதுகு தண்டில் இருந்து அவரது மண்டை ஓடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுவன் உடனடியாக விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்தனர். சுலைமான் ஹாசன் மண்டை ஓடு கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து டாக்டர் ஓஹத் ஐனவ் கூறுகையில், "இது ரொம்பவே சிக்கலான ஆப்ரேஷன்.. இதைச் செய்து முடிக்கவே பல மணி நேரம் ஆனது. சேதமடைந்த பகுதியில் தட்டுகளை வைத்து இணைத்தோம். இப்போது இருக்கும் அதிநவீன மருத்துவமும் சிகிச்சை முறையும் தான் குழந்தையைக் காப்பாற்றியுள்ளது.
குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதில் எங்கள் டீம் உறுதியாக இருந்தது. சிறுவன் உயிர் பிழைக்க 50% மட்டுமே வாய்ப்பு மட்டுமே இருந்தது. இருப்பினும், நாங்கள் முழு நம்பிக்கையுடன் ஆப்ரேஷனை செய்தோம்.. இப்போது அவன் உயிர் பிழைத்துவிட்டான்" என்று அவர் தெரிவித்தார்.
தொடர் சிகிச்சை: இந்த ஆப்ரேஷன் கடந்த மாதமே நடந்துவிட்டது. இருப்பினும், சில காரணங்களால் இது குறித்த தகவல்களை மருத்துவர்கள் இப்போது தான் வெளியிட்டனர். ஆப்ரேஷனுக்கு பிறகும் ஹாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் சமீபத்தில் தான அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் சில காலம் தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
எலும்பு தண்டில் இருந்து மண்டையோடு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட போதிலும், அந்த சிறுவனுக்கு எந்தவொரு நரம்பியல் குறைபாடுகளும் ஏற்படவில்லை. உணர்திறன், மோட்டார் செயலிழப்பு என எதுவும் ஏற்படவில்லையாம். ஆப்ரேஷனுக்கு பிறகும் கூட அந்த சிறுவன் வழக்கம் போலவே இருக்கிறேன். இவ்வளவு சிக்கலான ஆப்ரேஷன் நடந்த பிறகும் மற்றவர்கள் உதவியின்றி நடப்பதும் சிறிய விஷயம் அல்ல என்று மருத்துவர்கள் வியந்துள்ளனர்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications