இந்த பூமியால் எவ்வளவு பேரைத்தான் தாங்க முடியும்?
வாஷிங்டன்: இந்த அண்டவெளியில் பூமியானது ஒரே தம்மாத்தூண்டு புள்ளி போல. அண்டத்தைப் பொறுத்தவரை நாமெல்லாம் ஒரு கொசுறு போல. ஆனால் பூமியில் உள்ள நமக்கு இது மிகப் பிரமாண்டமானதுதான். பல லட்சம் ஷங்கர் படங்களுக்கு இணையான பிரமாண்டம் போன்றது இந்த பூமி. ஆனால் இந்த பூமியால் எத்தனை பேரை தாங்க முடியும் என்று நாம் யோசித்ததுண்டா?
பூமியின் பெரும்பகுதி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அதாவது 70 சதவீதம் தண்ணீர்தான். மீதப் பகுதியில்தான் நிலம் உள்ளது.
அங்குதான் நாமெல்லாம் ஒட்டிக் கொண்டிருக்கிறோம், வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

150 மில்லியன் ச.கி.மீ...
பூமியின் நிலப்பரப்பானது கிட்டத்தட்ட 150 மில்லியன் சதுர கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்குள்தான் நாம் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறோம், அன்பு செலுத்துகிறோம், அடித்துக் கொள்கிறோம், நம்மை நாமே "அழித்தும் கொல்கிறோம்".

எத்தனை பேரைத் தாங்கும்...
இந்த நிலையில் நமது பூமி எத்தனை பேர் வரை தாங்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வி ஒன்று எழுந்துள்ளது. பூமியின் நிலவரப்படி எத்தனை பேர் வரை இங்கு வசிக்க முடியும், இருக்க முடியும் என்பதே இந்த கேள்வியின் சாராம்சம்.

மக்கள் தொகை...
தற்போது பூமியின் மக்கள் தொகையானது 7 பில்லியன் ஆகும். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. இந்த நூற்றாண்டின் இறுதியில் அது 10 பில்லியனாக உயரும் நிலை உள்ளது.

10 பில்லியன் ஓகே...
எனவே எந்த அளவு வரை பூமியில் மக்கள் பெருக்கம் அதிகரிக்க முடியும், எவ்வளவு மனிதர்களை இந்த பூமி தாங்க முடியும் என்ற ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 9 முதல் 10 பில்லின் மக்கள் தொகை வரை பூமிக்கு பிரச்சினை இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அடுத்து செவ்வாய் தான்...
இதுகுறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழக சமூக உயிரியல் துறை தலைவர் எட்வர்ட் வில்சன் கூறுகையில், "தற்போதைய பூமியின் நிலவரப்படி, வரும் காலத்தில் 3.5 பில்லின் ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் மனிதர்களால் வசிக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் 10 பில்லியன் மனிதர்கள் வரை பூமியால் தாங்க முடியும்" என்று கூறியுள்ளார்.
அப்ப அதற்கு மேல் மக்கள் தொகை அதிகரித்தால் என்ன செய்வார்கள்.. வேறென்ன செவ்வாய்தான்!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications