Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனா விரித்த "மாய வலை.." கடைசி நொடியில் இத்தாலி எடுத்த முடிவு.. என்ன தான் நடக்கிறது? பகீர் பின்னணி

Subscribe to Oneindia Tamil

ரோம்: சீனாவின் கனவுத் திட்டமான தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் திட்டத்தில் இருந்து விலகுவதாக இத்தாலி அறிவித்துள்ளது. இது சீனாவுக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

உலகில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாகச் சீனா இருக்கிறது. கடந்த 1980களில் ஆரம்பித்த சீனாவின் வளர்ச்சி கொரோனாவுக்கு முன்பு வரை படுவேகமாக வளர்ந்து வந்தது. ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் சீனா ஒரு உற்பத்தி ஹப்பாகவே இருந்தது.

 How the Only G7 Nation Italy pulls out from Chinas Massive Infra Plan

அதிலும் குறிப்பாகச் சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்ற பிறகு சீனாவின் வளர்ச்சி எங்கேயோ போனது. வளர்ச்சி எந்தளவுக்கு இருந்ததோ அதே அளவுக்குச் சீனாவின் அத்துமீறல்களும் சீனாவைச் சுற்றி சர்ச்சைகளும் அதிகரித்தது.

சீனாவின் திட்டம்: மேலும், சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அப்படி ஜி ஜின்பிங் கடந்த 2013இல் அறிவித்த திட்டம் தான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative). உலகின் பல்வேறு நாடுகளையும் சாலை, ரயில் மற்றும் கடல் பாதைகள் மூலம் சீனாவுடன் இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். உலகெங்கும் சுமார் 150+ நாடுகள் இந்தத் திட்டத்தில் இணைந்திருந்தன.

சீனாவின் "மாய வலை.." ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இத்தாலி.. ஜி20-இல் இதை யாருமே எதிர்பார்க்கலயே! ட்விஸ்ட்

அப்படி இந்தத் திட்டத்தில் இணைந்த முக்கியமான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று இந்த இத்தாலி. ஜி7 நாடுகளில் இந்தத் திட்டத்தில் இந்த ஒரே நாடு இத்தாலி ஆகும். கடந்த 2019இல் இந்தத் திட்டத்தில் சீனா இணைந்திருந்தது. இதற்கிடையே நான்கே ஆண்டுகளில் இதில் இருந்து விலகுவதாக இத்தாலி அறிவித்துள்ளது. இது சீனாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இத்தாலி எடுத்த முடிவு: இத்தாலி இந்தத் திட்டத்தில் இருந்து விலகவுள்ளதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாகச் சீனாவிடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பும் எந்தவொரு செய்திக்குறிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், இத்தாலி அந்தத் திட்டத்தில் இருந்து விலகியதை அந்நாட்டு அரசின் முக்கிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக இத்தாலி செய்தி நிறுவனங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாகச் சீனாவிடம் தெரிவிக்கப்பட்டது என்பதைத் தாண்டி அந்த அதிகாரிகள் கூடுதலாக எந்தவொரு தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி பிரதமராக கிஸேப்பே கொண்டே இருந்த போது அந்நாட்டு இதில் இணைந்தது. இருப்பினும், அதன் பிறகு பதவியேற்ற தற்போதைய பிரதமர்ஜியோர்ஜியா மெலோனி நீண்டகாலமாக இதை எதிர்த்தே வந்துள்ளார். இந்தத் திட்டத்தால் இத்தாலிக்குப் பெரியளவில் பலன் இல்லை என்பது அவரது நிலைப்பாடு.

கடைசி நேரத்தில் தப்பிய இத்தாலி: இந்த ஆண்டு இறுதிக்குள் இத்தாலி விலகுவதாக அறிவிக்கவில்லை என்றால் இந்த ஒப்பந்தம் மார்ச் 2024இல் தானாகவே புதுப்பிக்கப்படும் என்ற விதி இருந்தது. இந்தச் சூழலில் தான் இத்தாலி இதில் இருந்து விலகியுள்ளது. அதேநேரம் சீனாவுடன் மற்ற அனைத்து உறவுகளையும் தொடரவே விரும்புவதாக இத்தாலி தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. முன்னதாக இந்தாண்டு டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டிலும் கூட இத்தாலி பிரதமர் சீனாவிடம் இது குறித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்கள்: உலகிலேயே இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் மிகப் பெரிய திட்டமாக இருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவில் எஸ்வதினி நாட்டைத் தவிர 53 நாடுகள் இந்த் திட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதைச் சீனாவின் மாயவலை எனப் பலரும் விமர்சிக்கிறார்கள். அதாவது அதிகளவில் கடன் கொடுத்து அல்லது முதலீடு செய்து ஒரு நாட்டை கட்டுப்படுத்தவே சீனா இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக விமர்சனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+