மியான்மர் அதிபர் பதவிக்கு முன்னாள் டிரைவரை பரிந்துரை செய்த சூகி
நைபிடாவ்: மியான்மரின் புதிய அதிபராக தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகியின் முன்னாள் டிரைவர் ஹ்தின் க்யாவ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
மியான்மர் ராணுவத்தால் பல ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி கடந்த 2010ம் ஆண்டு தான் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது.

ராணுவ ஆட்சியின்போது மாற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி சூகி எந்த ஒரு உயர் பதவியையும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிபராக முடியாது. தான் அதிபர் ஆகாவிட்டாலும் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை அதிபராக்க சூகி முடிவு செய்தார்.
இதையடுத்து தனது நம்பிக்கையின் நட்சத்திரமான முன்னாள் டிரவைர் ஹ்தின் க்யாவை அதிபர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார் சூகி. 69 வயதாகும் ஹ்தின் கியாவ் சூகியின் பள்ளி கால நண்பர். மேலும் அவரது அறக்கட்டளையை நடத்த உதவி செய்து வருபவர்.
சூகி ஹ்தினை தான் அதிபராக பரிந்துரைக்கக்கூடும் என்று மக்கள் எதிர்பார்த்தது போன்றே நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications