பட்டினியில்லா நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
பட்டினியில்லா நாடுகளின் பட்டிலை உலக உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன்: பட்டினியில்லா நாடுகளின் பட்டிலை உலக உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் உலக உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இந்தப்பட்டியலில் 119 வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பட்டினி
ஆப்பிரிக்க குடியரசு நாடுகள் 43.5 முதல் 50.9 மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இதனால் மோசமான பட்டினி கொடுமையால் அவதிப்படும் நாடுகள் என பட்டியலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

பின்னுக்கு சென்றது இந்தியா
இந்தப் பட்டியலில் 31.4 மதிப்பெண்களுடன் இந்தியா 100வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே அதிக உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தியா பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 97வது இடத்தைப் பிடித்திருந்தது.

ஊட்டச்சத்து குறைபாடு
உலக உணவு கொள்கை ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் பட்டினியால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கூட முன்னிலை
பொருளாதார தடை உள்ளிட்டப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியாக்கூட இந்தியாவுக்கு முன் 93 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாள் 72வது இடத்தையும், மியான்மர் 77வது இடத்தையும் பங்களாதேஷ் 88வது இடத்தையும் இலங்கை 84வது இடத்தையும் சீனா 29வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஈராக் 78வது இடம்
போரால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் கூட இந்தியாவை விட பட்டினியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பட்டியில்லா நாடுகளின் பட்டியலில் ஈராக் 78 வது இடத்தை பிடித்துள்ளது. நமது பங்காளி நாடான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 106வது இடத்தைப் பிடித்துள்ளது.

9 பேரில் ஒருவர் பட்டினி
2000வது ஆண்டிலிருந்ததைவிட தற்போது 27 சதவீதம் பட்டினி எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறியுள்ள உலக உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், தற்போது உலகம் முழுவதும் 9 பேரில் ஒருவர் உணவில்லாமல் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications