மன்மோகன் சிங்கை கிராமத்து பெண் என்று சொல்லவே இல்லை: பாக். பிரதமர் நவாஸ் ஷரீப்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கிராமத்து பெண் என்று கூறவே இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கிராமத்து பெண் என்று அழைத்ததாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இந்த தகவலை ஷரீப் மறுத்துள்ளார்.

I never called Manmohan Singh a village woman, says Nawaz Sharif

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் மன்மோகன் சிங்கை கிராமத்து பெண் என்று அழைக்கவே இல்லை. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கவில்லை. மாறாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் மன்மோகன் சிங்கும், நவாஸ் ஷரீபும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு முந்தைய நாள் ஷரீப் மன்மோகன் சிங்கை கிராமத்து பெண் என்று செய்தியாளர்களிடம் கூறியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பத்திரிக்கையாளர் ஷரீப் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றதும் தனது கருத்தை அந்த பாகிஸ்தானிய தொகுப்பாளர் வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+