சீனாவின் ஒரு அங்குல நிலத்தைகூட விட்டுகொடுக்க மாட்டேன்.. நாடாளுமன்றத்தில் சீறிய ஜி ஜின்பிங்
சீனாவின் ஒரு அங்குல நிலத்திற்கு கூட மற்றவர்களை சொந்தம் கொண்டாடவிடமாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
பெய்ஜிங் : சீனாவிற்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட மற்றவர்கள் யாரும் சொந்தம் கொண்டாடவிடமாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்கிற சட்டத்தில் சமீபத்தில் சீன நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்தத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி, ஏற்கனவே அதிபராக இருந்த ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையுடன், ராணுவத்தின் முப்படைகள் உள்ளிட்ட நாட்டின் உயரிய அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் நபராக ஜின் பிங் உயர்ந்துள்ளார்.
மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின்பிங், நாடாளுமன்றத்தில் நேற்று அரை மணி நேரம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அதிகாரங்கள் குவிந்து கிடந்தாலும் நான் மக்களுக்கு ஒரு வேலைக்காரனாகவே எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்று அவர் உறுதியளித்தார்.
மேலும், நமது இறையாண்மை மற்றும் எல்லைப்பகுதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றை சிறப்பாகப் பாதுகாத்து சீன மண்ணின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்றும், சீனாவிற்குச் சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட மற்றவர்கள் சொந்தம் கொண்டாட விடமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவைப் பிளவுபடுத்த நினைக்கும் சக்திகள் தோல்வியைத் தழுவும் என்றும், 130 கோடி மக்களின் கனவுகள் அனைத்தும் விரைவில் மெய்யாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், அண்டை நாடுகளுடனும், உலகின் இதர நாடுகளிடனும் நட்புறவை பலப்படுத்துவதன் வாயிலாக சீனாவின் சீரமைப்பின் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் பயனடையும் வகையில் நாங்கள் செயல்படுவோம் என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications