சவுதியில் 1000 தமிழ் குடும்பங்கள் ஒன்று கூடும் 'மெகா சங்கமம்'!
ரியாத்: சவுதியில் இந்தியன் ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் நடத்தும் மெகா சங்கமம் நிகழ்ச்சி வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
சவுதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம்(ஐ.எப்.எப்.) தமிழ் பிரிவின் சார்பில் வரும் 24.04.15 வெள்ளிக்கிழமையன்று மாபெரும் மக்கள் சங்கமம் அல்-ஜுபைல் கடற்கரை மஹாலில் நடைபெறவுள்ளது.
இந்த சங்கமத்தில் பங்கேற்க சங்கமிக்க அல்-ஜுபைல், அல்ஹஸ்ஸா, சிஹாத், கோபார், தம்மாம், கத்தீப் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ் குடும்பங்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்ய முந்துங்கள்.
முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: தம்மாம் - 0537813269, கோபார்:0502868765, சிஹாத்:0509243785, ஜுபைல்:0500644230, அல்ஹஸ்ஸா:0561565790
இந்தியன் சோஷியல் ஃபோரம்(ஐ.எஸ்.எப்.) குடும்பங்கள் 0557062185, 0507935734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.