சீனா மூளையை பாருங்க.. ‛பாண்டா’வை பார்க்கபோன மக்கள்.. உயிரியல் பூங்காவில் இருந்தது எது தெரியுமா?
பெய்ஜிங்: சீனாவில் ஷான்வேய் உயிரியல் பூங்காவில் நாய்க்கு பெயிண்ட் அடித்து ‛பாண்டா' கரடி என்று பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. இந்த நாய்க்கள் திடீரென்று குரைத்ததால் ‛குட்டு' வெளிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சீனா.. நம் அண்டை நாடாக இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து பொருட்களை போலவும் போலியான பொருட்களை தயாரித்து மார்க்கெட் செய்வது சீனாவுக்கு கைவந்த கலை. உதாரணமாக குறிப்பிட்ட பிராண்ட் ஒன்றின் பொருள் ரூ.50 ஆயிரம் என்று இருந்தால் அதேபோன்ற பொருளை சீனா தயாரித்து வெறும் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யும்.

இப்படி போலி பிராண்டுகளை உருவாக்கி வழங்குவதில் சீனா தான் இப்போதும் ‛டாப்பில்' உள்ளது. இந்நிலையில் தான் தற்போது சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா என்று ஏமாற்றி உள்ளனர்.
இந்த சம்பவம் சீனாவின் ஷான்வேய் உயிரியல் பூங்காவில் நடந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு ‛பாண்டா' கரடிகள் என்பது இல்லாமல் இருந்தது. இதையடுத்து ‛பாண்டா' கரடிகளை கொண்டு வந்தால் இன்னும் உயிரியல் பூங்காவுக்கு அதிகமான மக்கள் வருவார்கள் என்று அவர்கள் நினைத்தனர்.
ஆனால் அவர்களுக்கு ‛பாண்டா' கரடி என்பது கிடைக்கவில்லை. இதையடுத்து உயிரியல் பூங்காவை சேர்ந்தவர்கள் நாய்களை பிடித்து ‛பாண்டா' கரடிகள் போல் பெயிண்ட் அடித்து கூண்டுக்குள் விட்டனர். அதன்பிறகு ‛பாண்டா'கரடிகள் உள்ளதாக விளம்பரம் செய்தனர். இதையடுத்து உயிரியல் பூங்காவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
பொதுமக்கள் ஆர்வமாக கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்த ‛பாண்டா' கரடிகளை பார்த்து ரசித்தனர். அப்போது பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. இதற்கு அந்த ‛பாண்டா'வின் கரடிகளின் செயல்பாடுகள் தான் காரணம். பொதுமக்கள் பார்த்தபோதே ‛பாண்டா' கரடிகள் நாக்கை வெளியே நீட்டியப்படி இருந்தன. மேலும் திடீரென்று ‛லொள்.. லொள்..'' என குரைக்க தொடங்கியது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாய்க்கு பெயிண்ட் அடித்து ‛பாண்டா' கரடிகள் என தங்களை உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் ஏமாற்றியதை உணர்ந்தனர். இதனால் அவர்கள் உயிரியல் பூங்கா நிர்வாகத்திடம் தங்களுக்கான பணத்தை திரும்ப தரும்படி கோரி வாக்குவாதம் செய்தனர். ஆனால் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர், ‛‛இது நாய்களின் இனத்தை சேர்ந்த பாண்டா' எனக்கூறி சமாளிக்க முயன்றது.
ஆனால் பொதுமக்கள் விடாவில்லை. இதனால் வேறு வழியின்றி உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் நாய்களுக்கு ‛பாண்டா' போன்று பெயிண்ட் அடித்ததை ஒப்புக்கொண்டது. மேலும் சீனாவின் வடக்கு பகுதியில் வளர்க்கப்படும் ஸ்பிட்ஸ் வகை நாய் இனத்தை வாங்கி ‛பாண்டா' என ஏமாற்றியதை ஒப்புக்கொண்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications