மாயமான விமானம் தொடர்பான மர்மம் விரைவில் விலகும்...: ஆஸி. பிரதமர் நம்பிக்கை
சிட்னி: மாயமான மலேசிய விமானம் தொடர்பான மர்மம் விரைவில் விலகும் என ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் தேதி ஐந்து இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த மலேசிய விமானம் தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென மாயமானது.

முதலில் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து கிடைத்த முரண்பட்ட தகவல்களால் விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உண்டானது. அதனைத் தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணியில் சுமார் 26 நாடுகளின் விமானங்கள், கப்பல்கள் இறங்கின. சில நாடுகளின் செயற்கைக்கோள்களும் இந்த தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாயமான விமானத்தின் பாகங்கள் போன்ற பொருட்கள் கிடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை நோக்கி தேடுதல் பணியில் உள்ள விமானங்கள் மற்றும் கப்பல்கள் விரைந்துள்ளன.
இதற்கிடையே மாயமான விமானம் தொடர்பான மர்மம் விரைவில் விலகும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications