ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம்.. இந்தியா வாக்களிக்காமல் புறக்கணிப்பு!
ஜெனீவா: உக்ரைன் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக போரிட்டு வருகிறது. இதனால் உக்ரைனில் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இந்த போரை நிறுத்த ரஷ்யாவிடம் உலக நாடுகள் அறிவுறுத்தின. எச்சரிக்கையும் விடுத்து பார்த்தன. ஆனால் ரஷ்யாவோ விடாமல் போரிட்டு வருகிறது.
உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது. ஆனால் இந்த தீர்மானத்தில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா மறைத்துள்ளது. இந்த கவுன்சிலில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

9 வாக்குகள்
இந்த தீர்மானம் நிறைவேற ரஷ்யாவுக்கு ஆதரவாக 9 வாக்குகள் தேவை. ஆனால் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 13 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன. தான் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ரஷ்யாவும் அதன் நட்பு நாடான சீனாவும் மட்டுமே வாக்களித்தன.

தீர்மானம்
இதனால் இந்த தீர்மானம் போதிய ஆதரவு இல்லாததால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி அடைந்தது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஐநா பொது சபையில் மற்ற நாடுகள் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தீர்மானம் கொண்டு வந்தன. இதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு எதிரான தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தோல்வி அடையச் செய்தது.

141 வாக்குகள்
இந்த தீர்மானத்தின் மீதும் இந்தியா வாக்களிக்கவில்லை. அது போல் ஐநா பொது சபையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 வாக்குகளும் 5 உறுப்பு நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. அப்போதும் இந்தியா வாக்களிக்கவில்லை. அப்போது இந்த தீர்மானங்களின் மீதான வாக்களிப்பின் போது ஐநாவுக்கான இந்திய தூதர், நடுநிலை வகிக்கிறோம் என்றும் அதே நேரம் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரை நிறுத்த வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துடன் சேர்த்து 3 தீர்மானங்கள் ஐநா பொது சபை முன்பும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் முன்பும் வைக்கப்பட்டன.

ரஷ்யா மீது தடைகள்
ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்த போதிலும் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக எண்ணெயை வாங்கி வந்தது. இது உலக நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. சில நாடுகள் இந்தியா, ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தன. ஆனால் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்ததன் மூலம் தனது நடுநிலைத்தன்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications