லிபியாவில் வாழும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!

Subscribe to Oneindia Tamil

திரிபோலி: லிபியாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டமாக நடைபெற்று வருவதால் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!

லிபியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கடாபி 2011ல் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு எழுச்சி பெற்ற போராளிகளால் அங்கு உள்நாட்டு யுத்தம் மூண்டுள்ளது.

India asks its nationals to leave Libya amid spiraling violence

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களுக்கும் கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது.

இதனால் திரிபோலியில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடி விட்டு அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா உத்தரவிட்டது. ஐ.நா அமைப்பும், துருக்கியும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுள்ளன.

இதேபோல் லிபியாவில் வாழும் 6 ஆயிரம் இந்தியர்களையும் உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து யாரும் லிபியாவுக்கு வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பணிபுரியும் தங்களது மாநிலத்தவரை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர உதவ வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஆந்திர மாநில அரசு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+