இந்தியாவை விரைவில் எரித்து சாம்பலாக்குவோம்.. லஷ்கர் புது சூளுரை
இந்தியாவை விரைவில் சாம்பலாக்குவோம் என்று லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கராச்சி: இந்தியாவுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது. அதை விரைவில் சாம்பலாக்குவோம் என்று லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பிஜ்பேகரா அருகேயுள்ள கர்போரா அர்வானி பகுதியில் லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் கூட்டாக இணைந்து அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

பதிலடி தாக்குதல்
பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்ததில் லஷ்கர் ஏ தொய்பா முக்கிய தளபதி ஜூனைத் மட்டூ உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும் அவர்களின் சடலங்கள் கைப்பற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பழிவாங்கும் நடவடிக்கை
இதற்கிடையே அசாபால் பகுதியில் நேற்று மாலை, போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சப் இன்ஸ்பெக்டர் பிரோஸ் தர் உள்ளிட்ட 6 போலீஸார் வீர மரணமடைந்தனர். இதனால் காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.

தீவிரவாத அமைப்பின் அறிக்கை
தங்கள் அமைப்பின் முக்கிய தளபதியை போலீஸார் சுட்டுக் கொன்றதால் ஆத்திரமடைந்த லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா காஸ்நவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் அமைப்பினரின் தியாகங்கள் வீண் போகாது. எங்கள் இயக்கத்தின் இறந்த வீரர்களின் தூய்மையான ரத்தம் இந்தியாவுக்கு அழிவை ஏற்படும் என்பதை நீருபிக்கும். முஜாஹிதீன் அமைப்பை அழிக்க இந்த பூமியில் யாருக்கும் சக்தி இல்லை.

இந்தியா ஒரு புற்றுநோய்
மனித இனத்துக்கும், மனத உரிமை மீறலுக்கும், அன்புக்கும், நல்லிணக்கத்துக்கும் இந்தியா ஒரு புற்றுநோயாகும். எங்கள் அமைப்பினரால் கொழுந்து விட்டு எரியும் தீயானது நிச்சயம் இந்தியாவின் ஒவ்வொரு செங்கல்லையும், கற்களையும் தாக்கும். விரைவில் இந்தியா சாம்பலாகும். ரமலான் நோன்பு காலம் என்பது அல்லாவின் ஆசிகள் கிடைக்கும் மாதமாகும்.

அழிவு நெருங்கிவிட்டது
எனவே இந்தியா அதன் அழிவுகாலத்துக்குள் சென்றுவிட்டது. இந்தியா ஒரு காட்டுமிராண்டித்தனமான நாடு என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த அப்பாவிகள் மீது இந்திய படைகள் நடத்திய தாக்குதல்களே போதுமானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications