எல்லையில் கூட்டு பாதுகாப்பு பற்றி இந்தியா – சீனா பேச்சுவார்த்தை
பெய்ஜிங்: எல்லைப் பகுதியில் கூட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்வது குறித்து இந்தியா, சீனா இடையே நேற்று 4வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர். இதனால் எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் சேர்ந்து கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக இருநாடுகளின் பிரதிநிதிகளும் ஏற்கெனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். 4-வது கட்டமாக நேற்று பெய்ஜிங்கில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது எல்லைப்பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அடுத்த மாதம் அக்டோபர் இறுதியில் பிரதமர் மன்மோகன்சிங் சீனா பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது இருநாடுகளும் கூட்டாக எல்லை பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபடுவது சம்பந்தமான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications