இந்தியா செய்தது தவறு.. பதிலடி கொடுக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது.. பாக். அமைச்சர் கோபம்!
விதிகளை மீறி தாக்குதல் நடத்திய இந்தியாவை திருப்பி தாக்குவதற்கு பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இஸ்லாமாபாத்: விதிகளை மீறி தாக்குதல் நடத்திய இந்தியாவை திருப்பி தாக்குவதற்கு பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இன்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்திய விமானப்படை இன்று அதிகாலை இந்த தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
என்ன பேட்டி
ஆலோசனைக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தனது பேட்டியில், இந்தியா பெரிய தவறை செய்துவிட்டது. பாகிஸ்தான் நிலத்தை இந்தியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் எல்லா விதிகளுக்கு புறம்பான நடவடிக்கை.
என்ன பதில்
பாகிஸ்தானின் எல்லையை தாண்டி உள்ளே வந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. சுய பாதுகாப்பிற்காக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதில் எந்த தவறும் கிடையாது. இதற்காகத்தான் நாங்கள் அவசர சந்திப்பை நடத்தினோம்.
இதுதான் முடிவு
இந்த முடிவை நாங்கள் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவித்தோம். இந்தியா நடத்திய தாக்குதல் மீதான நடவடிக்கை குறித்து அவரிடம் பேசிய பின் முடிவு செய்வோம் என்று குரேஷி தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன?
ஆனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி இப்படி கூறி இருக்கும் வேளையில், நேற்றுதான் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். எல்லை அருகே வந்து காஷ்மீரில் மக்கள் இருக்கும் பகுதி அருகே தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.