இந்தியாவில் முதியவர்களின் அவலநிலை..: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஜெனீவா: முதியோர் நலனை பராமரிக்கும் நாடுகள் குறித்து 91 நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வில் இந்தியா 73வது இடத்தைப் பிடித்துள்ளதாம்.
அக்டோபர் 1ம் தேதியான நேற்று உலக முதியோர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதியோர் நலனை சிறப்பாக பராமரிக்கும் நாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில், இந்தியா 73வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ள பிற தகவல்களாவன...

91 நாடுகளில் ஆய்வு....
முதியோரின் வருமானம், வாழ்க்கை சூழல், உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு அம்சங்கள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 'குளோபல் ஏஜ்வாட்ச் இண்டெக்ஸ் 2013'ன் என்ற பெயரில் 91 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது.

முதலிடத்தில் ஸ்வீடன்....
இந்த ஆய்வின் முடிவுகளின்படி முதியோரின் நலனை சிறப்பாக பராமரிக்கும் நாடுகளில் ஸ்வீடன் சிறப்பிடம் பெற்றுள்ளது.

கடைசியில் ஆப்கானிஸ்தான்...
மேலும், மிகவும் மோசமான நாடு என்ற பட்டத்துடன் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.

கடைசிக்கு முந்தியில் பாகிஸ்தான்....
இரண்டாம் இடத்தில் ஜெர்மனியும், ஆப்கானிஸ்தானுக்கு முந்தைய 2 இடங்களில் பாகிஸ்தானும், தான்சானியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது..

இலங்கைல பரவாயில்லை...
பொலிவியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் முதியோரின் நிலை சுமாராக உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது இந்த ஆய்வறிக்கை.

முதியோருக்கு முக்கியத்துவமில்லை....
உலகின் பணக்கார நாடுகளான ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றில் முதியோருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஏழ்மை நிலையில் உள்ள தெற்காசிய நாடுகளில் அளிக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா 73வது இடம்....
இந்த ஆய்வறிக்கையின் படி, இந்தியா முதியோருக்கான பராமரிப்பில் 73ம் இடத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

வேலைக்கு செல்லும் முதியவர்கள்....
மேலும், இந்தியாவில் 90% சதவீதத்திற்கும் அதிகமான முதியவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பேணுவதற்கு வேலைக்கு செல்வதாக அதிர்ச்சித் தகவல் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications