கருப்பு பண பதுக்கலில் உலகளவில் மூன்றாவது இடம் இந்தியாவுக்கு! இது சாதனையல்ல வேதனை!
வாஷிங்டன்: கருப்பு பணத்துக்கு எதிராக நடைபெறும் இவ்வளவு போராட்டங்களுக்கு நடுவேயும், உலக அளவில் வெளிநாடுகளுக்கு கருப்பு பணத்தை கடத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் இறுக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்னை சேர்ந்த, உலக நிதி ஒருங்கிணைவு என்ற அமைப்பு கருப்பு பண புழக்கம் குறித்த ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிலுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்:
2012ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு கருப்பு பணத்தை கொண்டு சென்ற நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதலிடத்திலுள்ளது. அங்கு 122.86 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கருப்பு பணம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. இரண்டாவது இடம் சீனாவுக்கு. அங்கிருந்து 249.57 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணம் பதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இதே காலகட்டத்தில் 94.76 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் பதுக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இது சுமார் ரூ.6 லட்சம் கோடிகளாகும்.
அதே நேரம் 2003 முதல் 2012ம் ஆண்டுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் இந்தியாவில் இருந்து சென்ற கருப்பு பணத்தின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. இக்காலகட்டத்தில் 439.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியாவை விட்டு வெளியே சென்றுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் அதிக கருப்பு பணத்தை பிற நாடுகளில் பதுக்கியதில் சீனாவுக்கு முதலிடம். 1.25 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு பணத்தை பதுக்கியுள்ளனர் சீனர்கள். இரண்டாவது இடத்திலுள்ள ரஷ்யா 973.86 மில்லியன் டாலர்களையும், 3வது இடத்திலுள்ள மெக்சிகோ 514.26 பில்லியன் டாலர்களையும் பதுக்கியுள்ளது.