எதுவும் நடக்க கூடாது.. இந்தியா அனுப்பிய உளவு டிரோன் விமானங்கள்.. லடாக் எல்லையில் தீவிர சோதனை!
இந்தியா மற்றும் சீனா எல்லையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் லடாக் எல்லையில் இந்தியா டிரோன் விமானங்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது.
பெய்ஜிங்: இந்தியா மற்றும் சீனா எல்லையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் லடாக் எல்லையில் இந்தியா டிரோன் விமானங்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது.
இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனை மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. லடாக் எல்லையில் இரண்டு நாட்டு படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் இருந்தது. கடந்த மே 5ம் தேதியில் இருந்து இந்த மோதல் நீடித்து வருகிறது.
இதை தீர்க்கும் வகையில் இன்று லடாக்கில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டு நாடுகளை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் ராணுவ அதிகாரிகள் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்கிறார்கள்.

முடியும் வாய்ப்பு
இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா எல்லையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் லடாக் எல்லையில் இந்தியா டிரோன் விமானங்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. இந்தியா சார்பாக உயர் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்கிறார். அவருடன் இன்னும் 6 அதிகாரிகள் உடன் செல்கிறார்கள். இந்த மீட்டிங் மூலம் எல்லை பிரச்சனையில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அவசியம்
மிகவும் பரபரப்பாக இருக்கும் லடாக் எல்லையில் இந்தியாவின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் செல்வது என்பது மிக முக்கியமான விஷயம் ஆகும். இந்த பேச்சுவார்த்தை நடக்கும் போது எல்லையில் எதுவும் அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சின்ன தவறு கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் எல்லையில் மிக தீவிரமான ரோந்து பணிகளை செய்து வருகிறார்கள்.

டிரோன் விமானம்
இந்த நிலையில் எல்லையில் தற்போது டிரோன் விமானங்களை இந்தியா பறக்கவிட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் ஏதாவது ஊடுருவல் இருக்கிறது. சீன வீரர்கள் எங்காவது குவிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதி நவீன கேமரா கொண்ட சிறிய ரக டிரோன் விமானங்கள் ஆகும் இது. இதன் மூலம் புகைப்படங்கள் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.
Recommended Video

ரேடார்
ரேடாரில் சிக்காமல் இந்த டிரோன்கள் தாழ்வாக பறந்து சென்று புகைப்படங்களை எடுக்கும். இரவிலும் கூட இந்த டிரோன் விமானங்கள் உளவு பணிகளை செய்யும். இதில் இருக்கும் டெம்பரேச்சர் சென்சார் மூலம் இரவில் உளவு பணிகளை செய்ய முடியும். வீரர்கள் ஊடுருவலை எளிதாக கண்டுபிடிக்க முடியும். எல்லையில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு இடையே அசம்பாவிதம் எதுவும் நடக்க கூடாது என்று இந்தியா இப்படி ரோந்து பணிகளை செய்து வருகிறது.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications