எல்லாம் சுயநலம்.. அமெரிக்காவால் இந்தியா முட்டாளாகக் கூடாது.. சீன ஊடகம் அட்வைஸ்!
பெய்ஜிங்: அமெரிக்காவால் இந்தியா முட்டாளாகக் கூடாது என சீன அரசின் ஊடகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா- சீனா- பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. சீனாவும், பாகிஸ்தானும் இந்திய எல்லையில் ஊடுருவி இந்தியாவின் கோபத்தை சீண்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த மே 5-ஆம் தேதி முதல் பாங்கோ சோ ஏரி பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்த போது இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவங்கள் நடைபெற்றன.

இரு நாடுகள்
இதுகுறித்து இரு தரப்பு ராணுவத்தினரும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் தனது தலையங்கத்தில் கூறுகையில் இருநாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு எல்லை பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவது, நட்புறவுடன் நடந்து கொள்வது ஆகியவற்றை சீனா தனது நாட்டு கொள்கையாகவே வைத்துள்ளது.

இந்தியா
இந்த நிலையில் அமெரிக்காவால் இந்தியா முட்டாளாக்கப்படக் கூடாது. அமெரிக்கா எப்போதும் தனது நாட்டின் நலனுக்காக முயற்சிக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடையே பிளவை ஏற்படுத்த அமெரிக்கா ஆர்வமாக இருக்கிறது. இரு நாடுகளை அதன் பக்கம் இழுத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறது.

முட்டாள்
இந்தியா- சீனா எல்லை பிரச்சினையில் தங்களால் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என அமெரிக்கா காத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. எனவே அமெரிக்காவால் இந்தியா முட்டாளாக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் காட்டும் நட்புறவை திருப்பிக் கொடுக்க வேண்டும் என தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

காரணம்
இந்தியாவுடன் எப்போதும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க சீனா விரும்பவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அண்டை நாடுகளுடன் சுமூக நட்புறவை பேணுவது என்பதே சீனாவின் அடிப்படை கொள்கையாகும். இந்தியாவை எதிரியாக்க எங்களிடம் எந்த காரணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications