ஊடகம், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் தீர்மானம்.. ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கையெழுத்து
பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் மாநாட்டில் பத்திரிகை, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 2022 உறுதியான ஜனநாயக அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார்.
Recommended Video
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஜி7 நாடுகள் மற்றும் இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் கலந்துகொள்வது வழக்கம்.

ஜி7 மாநாடு
அந்த வகையில் ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவில் ஜி7 நாடுகளின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதற்காக கடந்த ஜூன் 26 ஆம் தேதி ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஜி7 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் "2022 உறுதியான ஜனநாயக அறிக்கை" தாக்கல் செய்யப்பட்டது.

ஜனநாயக பாதுகாப்பு அறிக்கை
இந்த 4 பக்க அறிக்கையில், 'ஒடுக்குமுறை மற்றும் வன்முறையை எதிர்த்து நிற்கும் ஜனநாயக பாதுகாவலர்களை வாழ்த்துகிறோம். உலகளவில் ஜனநாயக சக்திகள் மேம்பட சர்வதேச அளவில் ஒத்துழைப்பை வழங்கும் பணிகளை தொடங்குவோம். நேரடியாகவும், இணையதள வாயிலாகவும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்போம். ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் காப்போம்.

தகவல் உரிமை
ஜனநாயகத்தில் வெளிப்படையான விவாதங்களும், சுதந்திரமான பன்மைத்துவ ஊடகமும் அடங்கும். அனைத்து தகவல்களும் சட்டப்பூர்வமாகவும், வெளிப்படைத் தன்மையோடும், பொறுப்புணர்வுடனும் ஆன்லைனிலும், வெளியிலும் பொதுமக்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கிடைக்க வேண்டும்.

பத்திரிகை சுதந்திரம்
சுதந்திரமாக ஊடகங்கள் செயல்படுவதை உறுதிபடுத்த வேண்டும். தடையற்ற, பாதுகாப்பான, இலவச இணையதள சேவைகள் கிடைக்க செய்ய வேண்டும். சைபர் குற்றங்கள் இல்லாத டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதுடன், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

மனித உரிமை
மனித உரிமை ஆர்வலர்கள், ஊழல்களை அம்பலப்படுத்துபவர்களை பாதுகாக்க வேண்டும்." என்பன போன்ற பல தீர்மானங்கள் அதில் உள்ளன. இந்த அறிக்கையை ஜெர்மனி, அர்ஜெண்டினா, கனடா, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், செனெகல், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை கூட்டாக வெளியிட்டு உள்ளன.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ












Click it and Unblock the Notifications