ஊடகம், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் தீர்மானம்.. ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கையெழுத்து
பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் மாநாட்டில் பத்திரிகை, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 2022 உறுதியான ஜனநாயக அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார்.
Recommended Video
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் 3-வது நாளாக பல மாவட்டங்களில் லேசான நில அதிர்வு- மக்கள் கடும் அச்சம்
இதில் ஜி7 நாடுகள் மற்றும் இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் கலந்துகொள்வது வழக்கம்.
ஜி7 மாநாடு
அந்த வகையில் ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவில் ஜி7 நாடுகளின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதற்காக கடந்த ஜூன் 26 ஆம் தேதி ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஜி7 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் "2022 உறுதியான ஜனநாயக அறிக்கை" தாக்கல் செய்யப்பட்டது.
ஜனநாயக பாதுகாப்பு அறிக்கை
இந்த 4 பக்க அறிக்கையில், 'ஒடுக்குமுறை மற்றும் வன்முறையை எதிர்த்து நிற்கும் ஜனநாயக பாதுகாவலர்களை வாழ்த்துகிறோம். உலகளவில் ஜனநாயக சக்திகள் மேம்பட சர்வதேச அளவில் ஒத்துழைப்பை வழங்கும் பணிகளை தொடங்குவோம். நேரடியாகவும், இணையதள வாயிலாகவும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்போம். ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் காப்போம்.
தகவல் உரிமை
ஜனநாயகத்தில் வெளிப்படையான விவாதங்களும், சுதந்திரமான பன்மைத்துவ ஊடகமும் அடங்கும். அனைத்து தகவல்களும் சட்டப்பூர்வமாகவும், வெளிப்படைத் தன்மையோடும், பொறுப்புணர்வுடனும் ஆன்லைனிலும், வெளியிலும் பொதுமக்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கிடைக்க வேண்டும்.
பத்திரிகை சுதந்திரம்
சுதந்திரமாக ஊடகங்கள் செயல்படுவதை உறுதிபடுத்த வேண்டும். தடையற்ற, பாதுகாப்பான, இலவச இணையதள சேவைகள் கிடைக்க செய்ய வேண்டும். சைபர் குற்றங்கள் இல்லாத டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதுடன், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
மனித உரிமை
மனித உரிமை ஆர்வலர்கள், ஊழல்களை அம்பலப்படுத்துபவர்களை பாதுகாக்க வேண்டும்." என்பன போன்ற பல தீர்மானங்கள் அதில் உள்ளன. இந்த அறிக்கையை ஜெர்மனி, அர்ஜெண்டினா, கனடா, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், செனெகல், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை கூட்டாக வெளியிட்டு உள்ளன.