உங்களை எப்படி நாங்க மறப்போம்... ரஷ்யாவில் உருகிய மன்மோகன் சிங்

ரஷ்யா சென்றுள்ள மன்மோகன் சிங், மாஸ்கோவில் உள்ள சர்வதேச உறவுகளுக்கான கழகத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில் இந்தியா, ரஷ்யா இடையிலான நட்புறவை புகழ்ந்து பேசினார்.
அவர் கூறுகையில், சர்வதேச சவால்களின்போது எப்போதுமே இந்தியாவுக்கு்த் துணை நின்றுள்ளது ரஷ்யா. இந்தியாவுக்கு நெருக்கடி நேரிட்டபோதெல்லாம் ரஷ்யா துணை நின்றுள்ளது. இந்த நட்பை இந்தியா ஒருபோதும் மறவாது.
எங்களுக்கு நண்பர்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில் ரஷ்யா உற்ற துணைவனாக இருந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக ரஷ்யா செய்த உதவிகளை இந்தியர்கள் மறக்க மாட்டார்கள்.
இந்தக் காரணங்களுக்காகவே இந்தியர்கள், ரஷ்யாவின் நட்பை மதித்து வருகின்றனர். இந்திய, ரஷ்ய நட்பு மதிப்பு வாய்ந்தது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும்மேலாக ரஷ்யாவுடன் இந்திய நட்பு நீடித்து வருகிறது. வேறு எந்த ஒரு நாட்டுடனும் இந்தியாவுக்கு இப்படிப்பட்ட நீண்ட நெடிய நட்பு இருந்ததில்லை. உலக அளவில் வேறு எந்த நாடுகளுக்கும் இடையே இப்படிப்பட்ட நட்பு இருந்ததில்லை. இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய நண்பனாக ரஷ்யா விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரஷ்யாவின் ஆதரவால் பெரும் பலன்களை அடைந்துள்ளது இந்தியா. தேசிய வளர்ச்சியில் ரஷ்யாவின் பங்கு மறக்க முடியாதது. மின்துறை, தொழில்துறை, விண்வெளியியல், பாதுகாப்பு என இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவின் பங்கு பெரியது என்றார் பிரதமர்.
பிரதமருக்கு இந்தக் கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தையும் நிகழ்ச்சியின்போது அளித்துக் கெளரவித்தது.












Click it and Unblock the Notifications