ட்ரம்புக்கு ஆதரவு… வீடு வீடாய் வாக்கு சேகரிக்கும் இந்திய அமெரிக்கர்கள்…. களைகட்டும் யு.எஸ். தேர்தல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு இந்திய அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்து வீட்டு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வரும் நவம்பர் 8ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற் உள்ளது. ஜனநாயக கட்சியின் சார்பில் கிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

அமெரிக்கா முழுவதும் இவர்கள் இருவருக்கும் ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரம் படுவேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்து இந்திய அமெரிக்கர்கள் வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நியூ ஜெர்சி மற்றும் மன்மவுத் ஆகிய கவுன்டிகளில் உள்ள மக்களை சந்தித்து, டொனால்ட் ட்ரம்ப் எப்படி நல்ல அதிபராக செயல்படுவார் என்றும் கிலாரி எந்த விதத்தில் அதிபராக செயல்பட முடியாதவர் என்பதையும் வலியுறுத்தி இந்திய அமெரிக்கர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications