துபாயில் நடந்த இந்திய வர்த்தகவியலாளர் சங்க கூட்டம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் இந்திய வர்த்தகவியலாளர் சங்க கூட்டம் 6.09.2014 அன்று காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குஜராத் மாநில அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள ‘வைப்ரண்ட் குஜராத் 2015' எனும் உலகளாவிய வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுத்தனர்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

குஜராத் மாநிலத்தின் அரசுப் பிரதிநிதிகளாக பித்யுத் பிஹாரி ஸ்வைன் ஐ.ஏ.எஸ்., டெக்னோபோலிஸ் டவுன்ஷிப் தலைமை நிர்வாக அலுவலர் நிரவ் மஹாதேவியா, பரமித் பாரிக், கிரித் படேல், சுரேந்தர் சவுத்ரி, விஹாரிகா மஹிதா, அபிஷேக் ஷா, வருண் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Indian Business and professional council meet held in Dubai

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய கன்சல் ஜெனரல் சார்பில் புதிதாக இந்திய வர்த்தக கன்சலாக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆர் நந்தினி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இந்திய வர்த்தகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+