அடுத்தடுத்து கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா, ஹமாஸ் தலைவர்கள்! இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு அலர்ட்! உஷார்
டெல் அவிவ்: லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். அதேபோல ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு கடும் கொந்தளிப்புடன் இருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களை எச்சரித்திருக்கிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பாலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்கர் பலியானார்.
இதற்கு அடுத்த நாளே ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது. ஹமாஸில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பலர் இருந்தாலும், இஸ்மாயில் ஹனியே மிதவாதியாக அறியப்படுகிறார். இவருடைய குழந்தை பருவம் அகதிகள் வாழ்க்கையிலிருந்துதான் தொடங்கியது. ஹமாஸின் மற்ற தலைவர்களுடன் ஒப்பிடாமல், இவரை காசா மக்கள் தனி மரியாதையுடன் பார்த்து வந்தனர். குறிப்பாக போரை நிறுத்த இவர் மேற்கொண்டிருந்த பேச்சுவார்த்தையில் காசா மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.
இப்படி இருக்கையில் இவரது படுகொலை, மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஐநாவும், மத்திய கிழக்கின் நட்பு நாடுகளும் பாலஸ்தீன போர் நிறுத்தம் குறித்து ஹமாஸிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. இதன் விளைவாக போர் நிறுத்தம் ஏறத்தாழ சாத்தியமாகும் நிலையில் இருந்தது. இப்படி இருக்கையில், மேற்குறிப்பிட்ட இரண்டு படுகொலைகள் லெபனான், பாலஸ்தீனம் மற்றும் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் கோபத்தை தூண்டியுள்ளன.
எனவே லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு, அங்குள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கையை விடுத்திருந்தது. அதில், "லெபனானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பொதுவெளியில் நடமாட்டத்தை குறைக்க வேண்டும். அவசர தேவை எனில் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கும் எச்சரிக்கையை அங்குள்ள இந்திய தூதரகம் விடுத்திருக்கிறது.
அதில், "பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளால் (https://www.oref.org.il/eng) அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தயவுசெய்து எச்சரிக்கையுடன் இருக்கவும். மேலும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு அருகில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்பொழுதைய நிலைமையை இந்தியத் தூதரகம் மிகுந்த கவனத்துடன் கண்காணித்துக்கொண்டிருக்கிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றது.
அவசரத் தொடர்பிற்கு, தூதரகத்தின் 24 x 7 ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளவும்:
தொலைபேசி: +972-547520711, +972-543278392
மின்னஞ்சல்: [email protected]
தூதரகத்தில் ஏற்கனவே பதிவு செய்யாதவர்கள், விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் : https://forms.gle/ftp3DEXgJwH8XVRdA" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications