12 தங்க பிஸ்கட்களுடன் ஷார்ஜா விமான நிலையத்தில் இந்தியர் கைது
Subscribe to Oneindia Tamil
துபாய்: இந்தியாவுக்கு 12 தங்க பிஸ்கட்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் ஷார்ஜா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரது பெயர் வெளியிடப்படவில்லை. விமான நிலையத்தில் அந்த நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர். தனது பிரேஸ்லெட்டுக்குள் இந்த தங்க பிஸ்கட்களை அவர் மறைத்து வைத்திருந்ததாக ஷார்ஜா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவை 24 கேரட் தங்கமாகும். மொத்தம் 699 கிராம் எடை கொண்டது. வரி கட்டுவதிலிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications