தென் கொரிய பெண்ணை கண்ட இடத்தில் தடவி அத்துமீறிய இந்தியர்.. லைவ் ஸ்ட்ரீமிங்.. தொக்காக தூக்கிய போலீஸ்!
ஹாங்காங்: சீன நாட்டின் ஹாங்காங் நகரில் தென் கொரிய சுற்றுலா பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். சுற்றுலா பயணியான இளம்பெண், லைவ் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோது, அந்த நபர் அவரிடம் அத்துமீறியுள்ளார்.
ஹாங்காங் நகரின் சென்ட்ரல் பகுதியில் உள்ள டிராம் நிறுத்தத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான இளம்பெண் காத்திருந்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் வழி கேட்டு அவரை அணுகியுள்ளார். பின்னர் அந்த நபர் அந்த இளம்பெண்ணை நெருங்கி தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு இளம்பெண் மறுக்க, அவரை தகாத முறையில் தொட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.

"நான் தனியாக இருக்கிறேன்.. வா" எனக் கூறி, அந்தப் பெண்ணின் உடலில் பல இடங்களில் தொட்டும் தடவியும் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்பெண், தப்பிச் செல்ல முயன்றபோது, அவரை வளைத்துப் பிடித்து வலுக்காட்டயமாக சுவரின் மீது தள்ளி அப்பெண்ணின் மார்பைப் பிடித்து அழுத்தி, முத்தமும் கொடுக்க முயன்றுள்ளார்.
அப்பெண் அதைத் தடுக்க முயன்று அழுது, "என்னைக் காப்பாற்றுங்கள்" எனக் கூச்சலிட்ட நிலையில், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த அனைத்து சம்பவங்களையும், அந்த இளம்பெண் Twitch எனும் சமூக வலைதளத்தில் லைவ் வீடியோவாக ஸ்ட்ரீம் செய்துள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் அத்துமீறிய அமித் ஜெரியல் என்ற அந்த இந்தியர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொது இடத்தில், இளம்பெண்ணுக்கு இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுக்குச் சென்று, இந்தியாவின் மானத்தை வாங்கிவிட்டதாக நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Twitch streamer was sexually assaulted live in Hong Kong by a stranger. pic.twitter.com/7YwWkrQjLy
— DramaAlert (@DramaAlert) September 11, 2023












Click it and Unblock the Notifications