யு.கே.: பெண் நோயாளிகளை கண்ட இடத்தில் தொட்டு தொல்லை.. இந்திய டாக்டர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனில் பெண் நோயாளிகளை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளி டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் இந்திய வம்சாவளி டாக்டர் மகேஷ் பட்வர்தன்(53). அவர் கடந்த 2008ம்

Indian-Origin doctor on trial in UK for allegedly groping patients

ஆண்டு ஜூலை மாதம் முதல் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 6 பெண் நோயாளிகளை கண்ட இடத்தில் தொட்டும், தடவியும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போதிலும் அந்த குற்றச்சாட்டை மகேஷ் மறுத்துள்ளார். மகேஷ் ஒரு பெண் நோயாளியின் பின்னழகில் இருந்த டாட்டுவை பார்க்க அவரது ஆடையை அவிழ்க்க வைத்துள்ளார்.

மேலும் தன்னிடம் சிகிச்சை பெற வந்த மற்றொரு பெண்ணின் மர்ம உறுப்பு பகுதியை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தவிர 2 குழந்தைகளின் தாயான 37 வயது பெண் தன்னிடம் சிகிச்சைக்கு வந்தபோது எல்லாம் அவரை கட்டிப்பிடித்ததுடன் அவரது பின்னழகை பிடித்துப் பார்த்துள்ளார்.

நன்றாக பாடும் மகேஷ் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடியுள்ளார். பெண் நோயாளிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பான வழக்கு விசாரணை உல்விச் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அடுத்த வாரம் விசாரணை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+