கனடாவில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை... போலீஸிடம் இருவர் சரண்
கனடாவில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
ஒட்டாவா: கனடா நாட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த இந்தியர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2009-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றவர் பல்விந்தர் சிங். இவர் அங்கு லாரி ஓட்டுனராக பணிபுரிந்தார். இந்த நிலையில், பல்விந்தர் சிங் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் பல்விந்தர் சிங்கின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 2 இளைஞர்கள் தாமாக முன்வந்து சரணடந்தனர்.
ஆனால், கொலை செய்துவிட்டு 3-க்கும் மேற்பட்டவர்கள் ஓடியதாக கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.
கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் மட்டும் இந்த ஆண்டுக்குள் 11 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications