இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. புகை மண்டலமான கிராமங்கள்.. 13 பேர் பலி, பலர் படுகாயம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமெரு எரிமலை வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய ஒரு நாடாகும். ரிங் ஆப் பயர் என்று அழைக்கப்படும் அதிக எரிமலைகளை கொண்ட பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது.
இதனால் இங்கு அடிக்கடி எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடக்கும். இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான ஜாவா தீவில் நேற்றைய தினம் திடீரென எரிமலை ஒன்று வெடித்து சிதறியது.

வெடித்து சிதறிய எரிமலை
இந்தோனேசியா நாட்டின் ஜாவா என்ற தீவில் லுமாஜங் மாவட்டத்தில் அமைந்துள்ளது செமெரு எரிமலை. நேற்றைய தினம் இந்த எரிமலை கடுமையான புகை மூட்டத்துடன் வெடித்தது. செமெரு எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியது. இந்த மோசமான சம்பவத்தில் சிக்கி அங்கு வசித்த 13 பேர் உயிரிழந்தனர். மேலும், குறைந்தது 57 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகை மண்டலமாக கிராமம்
செமெரு எரிமலை கடும் சீற்றத்துடன் வெடித்து சிதறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. அதில் எரிமலையில் இருந்து வரும் கரும்புகையில் இருந்து தப்ப பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர். மேலும், இந்த எரிமலை வெடிப்பால் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சில கிராமங்கள் அப்படியே ஒட்டுமொத்தமாக எரிமலை சாம்பல் படிந்து இருக்கும் நிலை படங்களும் வெளியாகியுள்ளது.

உயிரிழப்பு அதிகரிக்கலாம்
தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்டமை துறை செய்தித்தொடர்பாளர் அப்துல் முஹாரி குறிப்பிட்டார். மேலும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் சிக்கியுள்ளதாலும் சாலைகள் மிக மோசமாக தேசமடைந்துள்ளதாலும் ஹெலிகாப்டரை கொண்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் அப்பகுதியில் சூழ்ந்துள்ள அடர்ந்த புகையால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

விமான சேவை
இந்த ஏரிமலை சீற்றத்தால் விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் விமான சேவைகள் வழக்கமாகவே இயங்குவதாகவும் இந்தோனேசிய வான்வெளியைக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிட்டத்தட்ட 130 ஆக்டிவ் எரிமலைகள் உள்ளன. அதில் ஜாவா தீவில் மிகவும் உயரமான இடத்தில் இந்த செமெரு எரிமைலை உள்ளது. முன்னதாக இதே எரிமலை இந்தாண்டு ஜனவரி மாதம் வெடித்தி சிதறியது. நல்வாய்ப்பாக அப்போது உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications