புது ஜீன்ஸ் கூட வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம்.. உச்சத்தில் பணவீக்கம்.. தத்தளிக்கும் அர்ஜென்டினா
புவெனஸ் ஐரிஸ்: அர்ஜென்டினாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பண வீக்கம் அதிகரித்துள்ளது. புது ஜீன்ஸ் உடைகளை கூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி அதிகரித்து உள்ளது. இதனால் பழைய துணிகளை வாங்கும் அளவுக்கு நிலமை மோசமாக உள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பண வீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. 140 சதவிகிதம் அதிகரித்து இருப்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத அளவுக்கு திண்டாடி வருகின்றனர். அமெரிக்கா டாலருக்கு நிகரான அர்ஜென்டினாவின் பணமான பெசொ ( peso)வின் மதிப்பு 349.50 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஜீன்ஸ் உடைகள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் அர்ஜெண்டின மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

கடுமையான விலையேற்றம் காரணமாக பழைய பொருட்கள், ஆடைகள் வாங்கும் சந்தைகளில் தற்போது வியாபாரம் அதிகரித்துள்ளது. புதிய உடைகள் மற்றும் பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு பண மதிப்பு சரிந்து விலையேற்றம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருப்பதால் பழைய உடைகளையே வாங்கி வருகின்றன. அர்ஜென்டினா தென் அமெரிக்க பிராந்தியத்தில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கி வந்தது.
தானியங்கள் ஏற்றுமதியில் கோலோச்சி வந்த அர்ஜென்டினா, இந்த அளவுக்கு கடுமையான பொருளாதர நெருக்கடியில் சிக்கியிருப்பது கடந்த சில தசாப்தங்களில் இதுவே முதல் முறையாகும். நாட்டின் 5-ல் இரண்டு பேர் வறுமையில் வாடி வருகின்றனர். பொருளாதார மந்த நிலை அதிகரித்து இருக்கும் இந்த சூழலில் அடுத்த வாரம் அர்ஜென்டினாவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபம் அடைந்தனர்.
இதனால் ஆளும் கட்சி கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது. ஜேவியர் மிலே தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக தேர்வாகியுள்ளார். அர்ஜென்டினாவில் நிலவும் இந்த பண வீக்க அதிகரிப்பு குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், "முன்பை போல ஒரு வணிக வளாகத்திற்கு சென்று எதுவும் வாங்க முடியாத நிலைதான் அனைவருக்கும் உள்ளது. தற்போது இருக்கும் விலைவாசி உயர்வு யாரும் நினைத்து கூட பார்க்காதது.
புது ஜீன்ஸ் துணிகளின் விலை கடந்த ஆண்டில் இருந்ததை விட இரு மடங்கு அதிகரித்து உள்ளது" என்றார். இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து இருக்கும் விலையேற்றம் அர்ஜென்டினாவில் மக்களை தவிப்புக்கு உள்ளாகியுள்ளது. அர்ஜென்டினாவின் பெசோவின் இந்திய ரூபாய் மதிப்பு 0.24 ஆகும். அதாவது அர்ஜெண்டின ஒரு பெசோவின் மதிப்பு இந்திய ரூபாயில், 0.24 மட்டுமே ஆகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications