Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Iran dubai attack: உங்க சண்டையில என்ன ஏன்யா அடிக்குறீங்க? துபாயை விடாமல் துவம்சம் செய்யும் ஈரான்! அங்க தான் ட்விஸ்டே!

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச வர்த்தக மையமாக விளங்கும் துபாய் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தாக்குதலின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ராணுவ தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. எல்லாவற்றையும் விட சர்வதேச வர்த்தக மையமாக விளங்கும் துபாயில் நடத்தப்பட்ட தாக்குதலே உலக அளவில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

Iran Dubai Middle East

ஈரான் இஸ்ரேல் பதற்றம்

ஈரானில் உள்ள அரசியல் சூழலும் இந்த மோதலின் தொடக்கமாக அமைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அந்நாட்டில் விலைவாசி உயர்வை எதிர்த்து, ஆட்சியை விமர்சித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு ராணுவத்தை பயன்படுத்தியதாகவும், பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில், பொதுமக்கள் மீது வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு மோதல்

மேலும், அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தம் குறித்து ஈரானுக்கு அழுத்தம் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக ஓமன் நாட்டின் முயற்சியால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டாலும், அதில் முன்னேற்றம் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் நடந்ததாகவும், பல கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்

எதிர்தாக்குதல் சாத்தியம் காரணமாக, இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் துபாய் நகரம் குறிவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. உலகளாவிய வர்த்தக, நிதி மற்றும் சுற்றுலா மையமாக திகழும் துபாய், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மக்கள் அதிகமாக வசிக்கும் நகரமாக கருதப்படுகிறது. அங்கு நடத்தப்பட்ட தாக்குதல், சர்வதேச சமூகம் கவனம் செலுத்தும் வகையில் அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஈரான் துபாய் தாக்குதல்

துபாயில் உள்ள Fairmont The Palm ஹோட்டலில் ஏவுகணை தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், Palm Jumeirah பகுதியில் கட்டட சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், Dubai International Airport, Burj Al Arab மற்றும் Jebel Ali Port போன்ற முக்கிய இடங்களும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில இடங்களில் காயங்களும் சேதங்களும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஏவுகணைகள் வானிலேயே தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வளைகுடா நெருக்கடி

துபாய் நகரின் பொருளாதார முக்கியத்துவமும் தாக்குதலுக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. உலகின் பல முன்னணி நிறுவனங்கள் செயல்படும் மையமாகவும், பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் நகரமாகவும் துபாய் விளங்குகிறது. இந்த நகரம் பாதிக்கப்படுவது சர்வதேச வர்த்தக மற்றும் நிதி துறைகளில் அதிர்வை ஏற்படுத்தும் என்பதால், உலக அரசியல் கவனம் திசை திருப்பப்படும் என்ற நோக்கம் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. மொத்தத்தில், துபாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு ராணுவ நடவடிக்கையாக மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+