ஆகாயத்தில் இங்கும் அங்கும் சுற்றி! இஸ்ரேலை குழம்ப வைத்து! தாக்கிய புது ஏவுகணை! ஈரான் மாஸ்டர்ஸ்ட்ரோக்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களில் அதி-கனரக, நீண்ட தூர செஜில் ஏவுகணையை முதன்முறையாக பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்துள்ளது. இரண்டு நாட்டு போரால் ஏற்பட்டு உள்ள பதட்டமான சூழல்களுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

செஜில் ஏவுகணை தாக்குதல்

ஈரானிய தூதரகம் மற்றும் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, போரின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு எதிராக நேற்று ஈரான் 12-வது கட்ட பதிலடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில், செஜில் ஏவுகணை விண்ணில் ஏவப்படும்போது இரவில் பிரகாசமான தடத்தை விட்டுச் செல்வது தெளிவாகக் காட்டுகிறது.

Israel Iran

இதுகுறித்து IRGC வெளியிட்ட அறிக்கையில், ஈரான் தாக்குதலில், அதி-கனரக, நீண்ட தூர, இரண்டு-நிலை செஜில் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டது. முதல்முறை இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டது. இது ஆகாயத்தில் இங்கும் அங்கும் சுற்றி..இஸ்ரேலை குழம்ப வைத்து தாக்கும் திறன் கொண்டது. இங்கும் அங்கும் பறக்கும் அதே நேரத்தில்.. பாரம்பரியமாக வெளியிடக்கூடிய நெருப்பு இல்லாமல்.. வித்தியாசமான புகை மற்றும் நெருப்பை வெளியிடும்.

மேலும், திட எரிபொருள் மூலம் இயங்கும் செஜில் ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவை. ஈரானின் மிகவும் துல்லியமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2500 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. ஒரு டார்கெட்டை 50 மீட்டருக்கும் குறைவான பிழையுடன் தாக்கும் திறன் கொண்டது.

செஜில் ஏவுகணை என்றால் என்ன?

செஜில் என்பது ஈரான் உருவாக்கிய இரண்டு-நிலை, திட எரிபொருள், தரை-தரை பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது சுமார் 2,000 முதல் 2,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் ஆழமான பகுதிகளையும், இஸ்ரேல் மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவின் அனைத்து பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்டது.

முக்கிய விவரக்குறிப்புகள்:

நீளம் 18 மீட்டர் (59 அடி)
விட்டம் 1.25 மீட்டர்
ஏவுகணை எடை 23,600 கிலோ
சுமக்கும் திறன் 700 கிலோ (1,543 பவுண்டுகள்)

இஸ்ரேலின் அயர்ன் டோம் மற்றும் ஆரோ பேட்டரிகள் போன்ற அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் சென்று தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் ஈரான் இஸ்ரேலை நோக்கி கோரம்ஷார்-4 என்று பயங்கர ஏவுகணையை ஏவியதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இது ஒரு அரிதான நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது ஒரே ஒரு ஏவுகணை மட்டுமே ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஏவுகணை இன்னும் முழுமையாக சோதனை செய்யப்படவில்லை. இதனால் நேரடியாக இஸ்ரேல் மீது ஏவி இதை ஈரான் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது இஸ்ரேலை சோதனை எலி போல ஈரான் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வேகமாக சென்று.. அதன்பின் பூமியை நோக்கி வந்து தாக்கும் என்பதால் இதை தடுக்க முடியாது. இதனால் இந்த போர் தீவிரம் அடையும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக ஈரானின் தொடர் தாக்குதல்களால் இந்த போரில் இஸ்ரேல் பின்தங்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+