பாகிஸ்தான் பேசுவார்த்தைக்கு முன்.. இடத்தை காலி பண்ணுங்க.. அமெரிக்காவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட ஈரான்!
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு மீண்டும் சிக்கலிலாகியுள்ளது. ஈரான் துறைமுகத்திற்கு வந்த கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியும், கைப்பற்றியும் உள்ளது. இதற்கு முன்பு ஈரான் பிரனாஸ் கப்பல் மீதும், பிரிட்டன் பைட்டர் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஈரான் தரப்பு, அமெரிக்கா தனது கடற்படைத் தடையை (naval blockade) முழுமையாக நீக்கினால் மட்டுமே பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் ஈரான் அதிபர், ஈரான் வெளியுறவு அமைச்சரும் உறுதியாக உள்ளனர்.

2ஆம் சுற்று பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர், ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் பேசி, அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க வலியுறுத்தி வருகின்றனர். ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இது குறித்து ஆலோசனை நடத்தியது.
ஈரான் தரப்பு இந்த பேச்சுவார்த்தை செல்லும் திசை சந்தேகமாக உள்ளது என்றும், முன்பு 2 சுற்று பேச்சுவார்த்தை பிறகு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் தரப்பின் தாக்குதல்கள் ஈரான் மீது நடைபெற்றது.
இந்த முறையும் அமைதி ஒப்பந்தத்துக்கு பிறகு பல வாரங்கள் பேச்சுவார்த்தை நீடித்த பின்னரும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாமலும், முடக்கப்பட்ட சொத்துக்களும் அப்படியே இருக்கிறது. இதனால் இந்த பேச்சுவார்த்தையிலும் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் என சந்தேகிக்கிறது.
மேலும், 2வது சுற்று பேச்சுவார்த்தை என்பது ஒரு ஏமாற்று வேலை (deception) ஆக இருக்கலாம் என ஈரான் அரசு தரப்பில் சந்தேகிக்கிறது. அல் ஜசீராவுக்கு வெளியிட்டுள்ள தகவல் படி, பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர், அமெரிக்கா தனது கடற்படைத் தடையை நீக்காவிட்டால் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்ற தெளிவான நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
டிரம்ப் பதிவு
ஏப்ரல் 19ஆம் தேதி டிரம்ப் தனது Truth Social தளத்தில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் நாளை மாலை இஸ்லாமாபாத்துக்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறார்கள் என்று பதிவிட்டார். அதே நேரத்தில், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதாகக் கூறி வருகிறது, இது விசித்திரமானது ஏனெனில் நாங்கள் ஏற்கனவே தடை விதித்துள்ளோம். ஈரான் தன்னறியாமல் நமக்கு உதவுகிறது. ஆனால் இந்த முடக்கத்தால் ஈரான் தான் தினமும் 500 மில்லியன் டாலர் இழப்பை சந்திக்கிறார்கள். அமெரிக்கா எதையும் இழக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா கடற்படை, ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு தடை விதித்துள்ளது. இதேபோல் ஈரான் IRGC படை ஹார்முஸ் வழியாக எந்த கப்பலும் செல்ல முடியாத வகையில் தடையை விதித்துள்ளது. இதனால் ஹார்முஸ் நீரிணை வழியாக உலக எண்ணெய் வர்த்தகத்தில் தொடர்ந்து பாதிப்பில் உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான நம்பியின்மை தொடரும் வரை, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இன்னும் தெளிவாக இல்லை.












Click it and Unblock the Notifications