ஈரான் அணு ஆயுத சோதனை? அமெரிக்காவை மொத்தமாக கைவிடும் அரபு நாடுகள்.. மத்திய கிழக்கில் புது திருப்பம்
டெஹ்ரான்: ஈரான் நாடு அணு ஆயுத சோதனை நடத்தியதாக கூறப்படும் செய்திகளுக்கு இடையே அரபு நாடுகள் ஈரான் பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானுடன் நட்பாக செல்ல அரபு நாடுகள் ஆசைப்படுவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.
சன்னி - ஷியா மோதல் காரணமாக பிரிந்து இருந்த சவுதி - ஈரான் கூட இந்த விவகாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிணைய தொடங்கி உள்ளது. நேற்று சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராச்சி ஆகியோர் ரியாத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

ஈரான் இஸ்ரேல் மோதல் குறித்து இவர்கள் ஆலோசனை செய்தனர். சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படியே இஸ்ரேலை ஆதரிக்காமல் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சவுதி அரேபியா சமீபத்தில்தான் அறிவித்தது. சேர முடியாமல் இருந்த இஸ்லாமிய நாடுகளை இஸ்ரேல் சேர்த்து வைக்க தொடங்கி உள்ளது.
அணு ஆயுத சோதனை: இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வந்தன. ஈரானின் பாலைவனத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடுமையான விவாதங்கள் ஏற்பட்டு உள்ளது. ஈரான் அணுகுண்டு சோதனை செய்துள்ளதோ என்ற ஊகங்களை இந்த நிலநடுக்கம் தூண்டி உள்ளது.
ஈரான் அடிக்கடி பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடு, ஆனால் அக்டோபர் 5 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பான நிலநடுக்கம் கிடையாது.. அது இயற்கையான நிலநடுக்கம் கிடையாது என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அங்கே ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.
ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். இது அதிகாரபூர்வ விவரம்தான். உண்மையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஈரான் அணுவை செறிவூட்டி இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதன் மூலம் ஈரான் அணு ஆயுதத்தை சோதனை செய்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரான் நாடு அணு ஆயுத சோதனை நடத்தியதாக கூறப்படும் செய்திகளுக்கு இடையே அரபு நாடுகள் ஈரான் பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானுடன் நட்பாக செல்ல அரபு நாடுகள் ஆசைப்படுவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. அதன் ஒரு கட்டமாக சவுதி அரேபியா - ஈரான் இடையே சந்திப்பு நடந்து உள்ளது.
சவுதி அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது. அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருந்து வந்தது. ஆனால் அப்படிப்பட்ட சவுதி ஈரானுடன் நட்பாக செல்ல தொடங்கி உள்ளது. நேற்று சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராச்சி ஆகியோர் ரியாத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது அமெரிக்க தரப்பை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications