ஈரான் நடத்திய அணு ஆயுத சோதனை? இஸ்ரேலுக்கு போன அமெரிக்க மெசேஜ்.. அவசரமாக ப்ளானை மாற்றிய நெதன்யாகு
டெஹ்ரான்: ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த செய்திகள் காரணமாக.. இஸ்ரேல் தனது தாக்குதல் திட்டத்தை மாற்றும் முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஈரான் அணு ஆயுத சோதனை செய்ததாக வெளியாகும் தகவல்களால் கடுமையான விவாதங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன.
கடந்த அக்டோபர் 5 அன்று மாலை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளிலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், செம்னான் மாகாணத்தில் உள்ள அராடன் என்ற இடத்தில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி இரவு 10:45 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 110 கிமீ தொலைவில் தெஹ்ரான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த முதல் நிலநடுக்கத்திற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு, நள்ளிரவில் இஸ்ரேலில் இரண்டாவது, பலவீனமான நடுக்கம் பதிவாகியுள்ளது, இந்த நில அதிர்வு நிகழ்வுகளின் தன்மை பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. இரண்டு நிகழ்வுகளின் அசாதாரண நேரமும், இரு நாடுகளுக்கிடையில் நடந்து வரும் பதட்டங்களும் சேர்ந்து பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஈரான் ரகசிய அணுசக்தி சோதனை நடத்தியதாக சந்தேகம் எழுந்தது. அதாவது ஈரான் அணு ஆயுத சோதனை செய்துள்ளது. அதனால் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இது என்று கூறப்படுகிறது.
சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து ஒரு பெரிய சந்தேகத்தையும் எழுப்பி உள்ளார். ஈரான் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. அங்கே ஏற்பட்ட நிலநடுக்கம் சாதாரண நிலநடுக்க கிடைக்கும். அது அணு ஆயுத சோதனை என்று சந்தேகிக்கிறோம். அவர்கள் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம், என்று கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த செய்திகள் காரணமாக.. இஸ்ரேல் தனது தாக்குதல் திட்டத்தை மாற்றும் முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஈரான் தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்துகிறது என்ற வதந்திகளுக்கு மத்தியில்,.. ஈரான் அணு உலைகள் மீதான தாக்குதல் திட்டத்தை இஸ்ரேல் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, அக்டோபர் 1 ம் தேதி தெஹ்ரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானிய அணுசக்தி தளங்களை இஸ்ரேல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக இஸ்ரேல் இராணுவ தளங்கள் அல்லது உளவுத்துறை அல்லது தலைமை இலக்குகள் மீது கவனம் செலுத்த வாய்ப்புள்ளது என்று அறிக்கை மேலும் கூறியது. ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இப்போது ஈரான் அணு உலைகள் மீதான தாக்குதல் திட்டத்தை இஸ்ரேல் ரத்து செய்ததாக கூறப்படுகிறது.
ஈரானில் இருக்கும் இராணுவ தளங்கள் அல்லது உளவுத்துறை அல்லது தலைமை இலக்குகள் மீது கவனம் செலுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாம். பின்னர் ஈரான் பதிலளித்தால் அணுசக்தி திட்டத்திற்கு செல்லுங்கள் என்று இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications