விட மாட்டோம்..தேடிப் போய் ’சம்பவம்’ செய்வோம்! குழந்தைகளை கொ*ற குற்றவாளி! ஈரான் ராணுவம் எடுத்த சபதம்!
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதலுக்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக அவர் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் அதிகமாக காணப்படவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியதாது.
இந்த நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் (Islamic Revolutionary Guard Corps) கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், "குழந்தைகளை கொன்ற இந்த குற்றவாளி உயிருடன் இருந்தால், எங்களது முழு வலிமையையும் பயன்படுத்தி அவரை தேடி சென்று கொல்வோம்" என்று நெதன்யாகுவை குறிவைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மார்ச் 13ஆம் தேதி நெதன்யாகு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்திருந்தார்.
ஆனால் அந்த காட்சியை கவனமாக பார்த்த சில சமூக வலைதள பயனர்கள், அவர் கையை அசைக்கும் ஒரு தருணத்தில் ஆறு விரல்கள் இருப்பது போல தோன்றுகிறது என்று சுட்டிக்காட்டினர். இதனால் அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான Artificial Intelligence மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. இந்த விவகாரம் வேகமாக பரவியதையடுத்து #WhereIsBibi என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டாகத் தொடங்கியது.
'பிபி' என்பது நெதன்யாகுவின் செல்லப்பெயராக பயன்படுத்தப்படும் பெயராகும். இதற்கிடையில், அமெரிக்க அரசியல் விமர்சகர் காண்டேஸ் ஓவேன்ஸ் உள்ளிட்ட சிலர் "பிபி எங்கே?" என்று கேள்வி எழுப்பியதும் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியது. சமூக வலைதளங்களில் சிலர் நெதன்யாகு உயிரிழந்துவிட்டார் என்றும், தற்போது வெளியிடப்படும் வீடியோக்கள் அனைத்தும் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த வதந்திகளை நெதன்யாகுவின் அலுவலகம் மறுத்துள்ளது. அவர் நலமாக உள்ளார் என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக கடுமையான ராணுவ பதற்றம் நிலவி வருகிறது.
வான் தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழல் மிகவும் பதற்றமாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள இந்த கடும் எச்சரிக்கை, அந்தப் பகுதியில் நிலவி வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
"ஈரானுக்கு ஆதரவு".. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications