மேற்கத்திய நாடுகளை வெறுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு 'பிரிங்கிள்ஸ், ரெட் புல்' மட்டும் பிடிக்குமாம்
பாக்தாத்: மேற்கத்திய நாடுகளை வெறுக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த நாடுகளில் தயாரிக்கப்படும் திண்பண்டமான பிரிங்கிள்ஸ் சிப்ஸ் மற்றும் ரெட் புல் பானம் ஆகியவற்றை மற்றும் உட்கொள்கிறார்கள்.
உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ் உருவெடுத்துள்ளது. அவர்கள் மேற்கத்திய நாடுகளை வெறுக்கிறார்கள். ஆனால் பலர் மேற்கத்திய நாடுகளில் இருந்து ஈராக் மற்றும் சிரியா வந்து தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் இங்கிலாந்தில் இருந்து ஏராளமான வாலிபர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்துள்ள தீவிரவாதிகள் பிரிங்கிள்ஸ் சிப்ஸ் மற்றும் ரெட் புல் ஆகியவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுவதாக ஈராக் மற்றும் சிரியா வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் மேற்கத்திய நாடுகளை வெறுத்தாலும் அங்கு தயாராகும் பொருட்களை சாப்பிட மட்டும் தவறுவது இல்லை.
இது குறித்து நசீம் என்ற கடைக்காரர் கூறுகையில்,
முன்பெல்லாம் பிரிங்கிள்ஸ், ரெட் புல் ஆகியவை பற்றி தெரியாமல் இருந்தது அல்லது அவை பணம் கொடுத்து வாங்கி சாப்பிடும் அளவில் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் டப்பா, டப்பாவாக பிரிங்கிள்ஸ் சாப்பிடுவதுடன், ரெட் புல் பானத்தையும் குடிக்கிறார்கள் என்றார்.