இளைஞரை பீரங்கியால் நசுக்கி கொடூரமாக கொன்ற தீவிரவாதிகள்... வைரலாகி பதற வைக்கும் வீடியோ
இளைஞர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் முதலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு பின்னர் அவரை பீரங்கிக்கு அடியில் தூக்கிப் போட்டு நசுக்கிக் கொல்லும் கொடூர நிகழ்வு அதிர்ச்சியையும் பெரும் கவலையையும் ஏற்படுத்திய
வாஷிங்டன்: இளைஞர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் முதலில் துப்பாக்கியால் பலமுறை சுட்டுவிட்டு பின்னர் அந்த இளைஞரை பீரங்கிக்கு அடியில் தூக்கிப் போட்டு நசுக்கிக் கொல்லும் கொடூர நிகழ்வு அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியையும் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வினை, வீடியோ எடுத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் இணையத்தில் பரவ விட்டுள்ளனர். இந்த கொடூர நிகழ்வினை எதிரிகள் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இணையத்தில் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் எதிரிகளை கொன்று குவிப்பது வழக்கமான செயல்தான் எனினும் இளம் சிறுவர்களை இதுபோன்று கொடூரமாக கொல்வது அனைத்து தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ காட்சிகளின் படி ஒரு இளைஞரை சரிமாரியாக சுடும் தீவிரவாதிகள் பின்னர் அவரை தரதரவென இழுத்துச் சென்று பீரங்கியால் நசுக்கிக் கொல்லும் கொடூரம் அரங்கேற்றப்படுகிறது. இந்தக் கொடூரச் செயலை அவர்கள் ஆரவாரத்துடன் செய்கின்றனர் என்பது காண்போரை பதற வைக்கும் விதமாக உள்ளது.












Click it and Unblock the Notifications