பெற்றோர்களை கொலை செய்ய குழந்தைகளை மூளைச் சலவை செய்யும் ஐஎஸ் !
லண்டன்: தங்கள் சொந்த பெற்றோர்களை கொல்ல குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மூளைசலவை செய்கிறது என்ற தகவல் ஐஎஸ் அமைப்பில் இருந்து தப்பி வந்த ஒரு சிறுவன் மூலம் வெளியாகியுள்ளது.
சிரியாவை முழுவதுமாக கைப்பற்றி தங்கள் ஆட்சியை நிலைநாட்டும் நோக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவ்வப்போது குழந்தைகள், பெண்களை பிணைக் கைதிகளாக கடத்திச் செல்வதும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அறிவிக்கபடாத தலைநகரமான ராக்காவில் தற்கொலை படை பயிற்சி அளிக்கப்பட்ட 60 சிறுவர்களில் ஒருவனான 12 வயது நசீர், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்து அண்மையில் தப்பி வந்து அகதிகள் முகாமில் இருந்த தன் குடுமபத்தோடு இணைந்தான்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் தான் இருந்த நாட்கள் குறித்து நினைவு கூர்ந்த நசீர் கூறியதாவது, "விமான படை தாக்குதல்கள் நடக்கும் போது எனக்கு மிகவும் அச்சமாக இருக்கும். ஐஎஸ் அமைப்பினர் எங்களை போன்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிறுவர்களிடம் அமெரிக்கா எங்களை கொல்ல முயற்சிக்கிறது என்று கூறுவர்.
எங்கள் பெற்றோரை விட, எங்களை அவர்கள் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் கூறுவார்கள். மேலும், எங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில், ஐஎஸ் அமைப்பு வலியுறுத்தும் இஸ்லாமிய கோட்பாடுகள் பற்றி நம்பிக்கையற்ற எங்கள் பெற்றோரை, நாங்கள் கொலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவார்கள்.
எங்களின் முதல் பணி எங்கள் பெற்றோரை கொலை செய்வதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவார்கள்" என்று தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் நசீர் தெரிவித்தான். முன்னதாக ஐஎஸ் இயக்கத்திலிருந்து வெளியேற வலியுறுத்தி வந்த தாயை அவரது மகனே பொதுமக்கள் மத்தியில் கொன்ற சம்பவம் சிரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications