சிறுமியை விலைக்கு வாங்கி.. சித்ரவதை செய்த கொடூரன்.. காலில் சங்கிலியுடனே உயிரைவிட்ட பரிதாபம்..!
பெர்லின்: 5 வயது சிறுமியை சித்ரவதை செய்தே கொன்றுள்ளார் ஒரு கொடூரன்.. அவருக்கு இப்போது ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
உலகம் முழுவதும் தீவிரவாதிகளின் பெருக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.. இதனால் அப்பாவி மக்களின் உயிர்களும் பறி போய் கொண்டிருக்கின்றன. இவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அந்தந்த நாடுகள் தீவிரமாகி வருகின்றன.
ஈராக் மற்றும் சிரியா... இந்த இரண்டு நாடுகளிலும் யாஸிடி என்னும் சிறுபான்மை சமூகத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.. இவர்கள் குருதீஸ் மொழி பேசுபவர்கள்..

தீவிரவாதம்
இந்த இரு நாடுகளிலுமே ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வலுவடைந்துள்ளது. இவர்கள், இந்த யாஸிடி இனத்தை சேர்ந்த ஆண்களை சிறைப்பிடித்து போவதும் அவர்களை கொடூரமாக கொல்வதும், பெண்களை வீட்டு வேலைக்காக அடிமைகளாக விற்பனை செய்தும் வந்தனர்..

சிரியா
அந்த வகையில்தான் சிரியாவில், 5 வயது சிறுமி பரிதாபமாக சிக்கி கொண்டாள்.. வீட்டு வேலை செய்வதற்காக இந்த சிறுமியை விலைக்கு வாங்கி கொண்டு போயுள்ளார் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்.. அந்த பெண்ணுக்கு குடிக்க தண்ணீர்கூட கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளான்.. அடிமையாக கட்டி வைத்துள்ளான்.. கடைசியில் சங்கிலியில் கட்டிவைக்கப்பட்ட நிலையிலேயே அந்த பிஞ்சு தன் உயிரைவிட்டு விட்டது..

அதிகாரி
இந்த சம்பவம் 2 வருடங்களுக்கு முன்பு நடந்து, உலக நாடுகளுக்கே அதிர்ச்சியை தந்தது.. இதற்கு சர்வதேச சமூக அமைப்புகள் புகாரும் தெரிவித்தன.. அந்த புகாரில் அடிப்படையில் அந்த அதிகாரி தாஹா அல் ஜூமாலி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.. இந்த இனப்படுகொலை ஜெர்மனி கோர்ட் விசாரித்து வந்தது. அதன்படி, நாடு கடத்தப்பட்டு கணவன், மனைவி 2 பேரும் ஜெர்மனி கொண்டு வரப்பட்டனர். யாஸிடி இனத்தை அழிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே 5 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டதும் பார்க்கப்படுகிறது..

ஆயுள் தண்டனை
எனவே, இதனை இனப்படுகொலை என அறிவித்து, தாஹா அல் ஜூமாலிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது ஜெர்மனி நீதிமன்றம். அவரது மனைவிக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது... மேலும் சிறுமியின் தாயாருக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது... யாஸிடி இனப்படுகொலை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications