சிறுவர்கள் கையில் ஏ.கே.47... கைதிகளின் தலையை வெட்ட பயிற்சி... திகில் கிளப்பும் ஐஎஸ்ஐஎஸ் வீடியோ
டமாஸ்கஸ்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சிறு குழந்தைகளுக்கும் துப்பாக்கிச் சுடுதல், பணையக் கைதிகளின் தலைகளை வெட்டுதல் போன்றவற்றிற்கு பயிற்சி தரும் அதிர்ச்சித் தகவல் வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அந்த தீவிரவாத இயக்கத்தில் ஆட்கள் சேர்ந்து வருகின்றனர். இதனால் வேகமாக பலம் பெற்று வரும் அந்த தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், சிறுவர்கள் கையில் ஏ.கே.47-ஐ ஏந்தி சுடுவதற்கு பயிற்சி பெறுவது போன்ற காட்சிகள் உள்ளன.
அதோடு, தங்களிடம் சிக்கும் பணையக் கைதிகளின் தலையை எவ்வாறு வெட்டுவது என குழந்தைகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயிற்சி அளிக்கும் காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன.
இந்த வீடியோவில் தோன்றும் சிறுவர்கள் தீவிரவாத உடையணிந்து, கைகளில் ஆயுதமுடன் பயிற்சி பெறுகின்றனர். ஈராக்கின் நைன்வே பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு ‘தி பிளட் ஆப் ஜிகாத் 2' என தீவிரவாதிகள் பெயரிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications