ஐஎஸ் அமைப்பை விட்டு வெளியேறச் சொன்ன தாயை கொன்ற தீவிரவாதி

Subscribe to Oneindia Tamil

ராக்கா: சிரியாவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் அந்த அமைப்பை விட்டு வெளியேறுமாறு கூறிய தனது தாயை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார்.

சிரியாவில் உள்ள அல் தபகா நகரைச் சேர்ந்தவர் அலி சக்ர்(20). ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி. தற்போது ராக்கா நகரில் வசித்து வருகிறார். அவரது வயதான தாய் ராக்கா நகரில் வேலை பார்த்து பிழைத்துக் கொண்டிருந்தார்.

Islamic State fighter kills mother for asking him to leave group

இந்நிலையில் அந்த தாய் அலியிடம் கூறுகையில், வெளிநாட்டு கூட்டுப்படைகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் அனைவரையும் அழித்துவிடும். அதனால் அந்த அமைப்பை விட்டு வந்துவிடு. நாம் நம் சொந்த ஊருக்கே தப்பியோடிவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அலி சக தீவிரவாதிகளிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் அலியின் தாயை கைது செய்தனர். அவர்களின் சட்டப்படி அலியின் தாய்க்கு மரண தண்டனை விதித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை ராக்கா நகரில் உள்ள தபால் நிலைய அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கான மக்கள் முன்பு அலியின் கையால் அவரின் தாயை கொலை செய்ய வைத்தனர்.

கடந்த 18 மாதங்களில் சிரியாவில் 2 ஆயிரம் பொது மக்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர். ஓரினச்சேர்க்கை, சூனியம் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+